ஓரின சேர்க்கைக்கு மறுத்த இளைஞர்: கூட்டு சேர்ந்து கொலை செய்த வாட்ஸ் ஆப் நண்பர்கள்; அதிர வைக்கும் சம்பவம்!

 

ஓரின சேர்க்கைக்கு மறுத்த இளைஞர்: கூட்டு சேர்ந்து கொலை செய்த வாட்ஸ் ஆப் நண்பர்கள்; அதிர வைக்கும் சம்பவம்!

தன்பால் உறவுக்கு மறுத்த இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வேலூர் : தன்பால் உறவுக்கு மறுத்த இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல் நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். இவருக்கு கார்த்திக், பாலாஜி என்ற இருவரோடு வாட்ஸ் ஆப்பில் நட்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 13 ஆம் தேதி நாட்றம்பள்ளிக்கு அவர்கள் இருவரும் வருவதாக  ஆனந்த்துக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

balaji

நண்பரின் அழைப்பை ஏற்று அவர்கள் கூறிய இடத்திற்கு ஆனந்தும் சென்றுள்ளார். அப்போது ஆனந்தை தன்பால் உறவில் ஈடுபட பாலாஜி மற்றும் கார்த்திக் ஆகிய இருவரும் வற்புறுத்தியுள்ளனர்.  இதற்கு ஆனந்த் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக், பாலாஜி இருவரும் ஆனந்தை கொலை செய்து பச்சூர்  ரயில் நிலையத்தின் தண்டவாளத்தில் வீசியுள்ளனர். 

murder

ரயில் தண்டவாளத்திலிருந்து ஆனந்தின் உடலை கைப்பற்றிய ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார், தற்கொலையாக இருக்கலாம் என விசாரணையைத் தொடங்கினர். பிரேத பரிசோதனை அறிக்கையில், ஆனந்த் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து ஆனந்துடைய செல்போன் அழைப்புகளை வைத்து நடத்திய விசாரணையில்  பாலாஜி மற்றும் கார்த்திக் ஆகியோர் சிக்கிக் கொண்டனர். அவர்களைக் கைது செய்த போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.