ஒரே குடும்பத்தில் 5 பேர் மர்ம மரணம் !! கொலையா? தற்கொலை?

 

ஒரே குடும்பத்தில் 5 பேர் மர்ம மரணம் !! கொலையா? தற்கொலை?

உத்தரபிரேதச மாநிலம் எட்டா அருகே உள்ள சிங்கர் நகர். நேற்று காவல்துறைக்கு ஒரு நபர் தொலைபேசி மூலம் தகவல் அளித்தார். அதில் ஒரு வீட்டில் 5 பேர் மர்ம முறையில் உயிரிழந்திருப்பதாக தெரிவித்தார்.

உத்தரபிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரேதச மாநிலம் எட்டா அருகே உள்ள சிங்கர் நகர். நேற்று காவல்துறைக்கு ஒரு நபர் தொலைபேசி மூலம் தகவல் அளித்தார். அதில் ஒரு வீட்டில் 5 பேர் மர்ம முறையில் உயிரிழந்திருப்பதாக தெரிவித்தார். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஒரே அறையில் சடலமாக இருந்த திவ்யா, அவரது சகோதரி புல்பூல், மகன் ஆருஷ் மற்றொரு குழந்தை ஆகியோரின் சடலங்களை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் 2வது மாடியில் திவ்யாவின் மாமனார் ராஜேஸ்வர் பச்சூரியின் சடலம் கைப்பற்றப்பட்டது. 

dead-78

திவ்யாவின் உடலில் காயம் இருப்பதாக கூறும் போலீசார் மற்ற நபர்களின் அருகில் சில மாத்திரைகள், கிருமி நாசினிகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். எனவே இவர்கள் தற்கொலை செய்து கொண்டனரா அல்லது கொலை நடைபெற்றதா என  உடற்கூறு ஆய்வுக்கு பின்னரே தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர்.