“ஒரு லட்சம் கொடு ,நடிகையை தொடு” -விபச்சார வலையில் வீழ்ந்த மாடல் பெண்களை பிடித்த போலீசார்

 

“ஒரு லட்சம் கொடு ,நடிகையை தொடு” -விபச்சார வலையில் வீழ்ந்த மாடல் பெண்களை பிடித்த போலீசார்

மும்பையில் மீரா-பயந்தர் பொலிசார் திங்களன்று ஒரு விபச்சார கூட்டத்தை பிடித்தார்கள் ,.அப்போது தென்னிந்திய திரைப்பட நடிகை உட்பட நான்கு மாடல்களை மீட்டனர். மேலும் இந்த சோதனையின் போது இரண்டு பிம்ப்களும் கைது செய்யப்பட்டனர்.


மும்பையின் மீரா பயந்தர் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக போலீசுக்கு தொடர்ந்து புகார் வந்ததையடுத்து அவர்களை பிடிக்க போலீசார் திட்டம் தீட்டினார்கள் .அதன் படி போலியாக சில வாடிக்கையாளர்களை ஏற்பாடு செய்து ,ஒரு இடத்திற்கு வரவைத்தார்கள்
அப்போது இரண்டு கார்களில் ஆறு பெண்கள் வந்தார்கள் அவர்களில் இருவர் காரிலிருந்து வெளியே வந்து போலி வாடிக்கையாளருடன் பேச ஆரம்பித்தனர். பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்ட பின்னர், இரண்டு பெண்களும் அவர்களிடமிருந்து 2 லட்சம் வாங்கி கொண்டனர் .
அப்போது அந்த பாலியல் பெண் அந்த தொகையை எடுத்துக் கொள்ளும்போது போலீசார் ஒளிந்திருந்து இருவரையும் பிடித்தார்கள் . அதன் பிறகு மற்றொரு காரில் அமர்ந்திருந்த மேலும் நான்கு பெண்களும் காவலில் வைக்கப்பட்டனர். போலீஸ் விசாரணையின் போது, ​​அவர்கள் அனைவரும் மாடல்கள் என்பது தெரியவந்தது, அவர்களில் சிலர் பல டோலிவுட் படங்களில் பணியாற்றியுள்ளனர் ,என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.
ப்ரோக்கர்கள் வேலை வாங்கி தருவதாக பொய் சொல்லி அப்பாவி பெண்களை விபச்சார வியாபாரத்தில் தள்ளினர் என்று போலீசார் கண்டுபிடித்தனர்.
அவர்கள் மீது ஐபிசியின் 370 மற்றும் 34 வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது செய்து, அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

“ஒரு லட்சம் கொடு ,நடிகையை தொடு” -விபச்சார வலையில் வீழ்ந்த மாடல் பெண்களை பிடித்த போலீசார்