உல்லாசத்திற்கு தடையாக இருந்த மகன் ; பிரம்பால் அடித்து கொன்ற தாய்!?

 

உல்லாசத்திற்கு தடையாக இருந்த மகன் ; பிரம்பால் அடித்து கொன்ற தாய்!?

திவ்யா  கணவரை பிரிந்து குழந்தைகளை அழைத்து கொண்டு கோவை கோவில்மேட்டில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார்

நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் அருண், இவருக்கு திவ்யா என்ற மனைவியும்,  அபிஷேக் என்ற 6 வயது மகனும், 3 வயது மகளும் உள்ளனர். இதையடுத்து குடும்ப தகராறு காரணமாக திவ்யா  கணவரை பிரிந்து குழந்தைகளை அழைத்து கொண்டு கோவை கோவில்மேட்டில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார்.

இதை தொடர்ந்து திவ்யா மிக்சர் கம்பெனிக்கு வேலைக்கு செல்ல அப்பகுதியில் வசித்து வரும் தேனி மாவட்டத்தை சேர்ந்த கால் டாக்சி டிரைவர் ராஜதுரை  என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இந்த நட்பு  கள்ளக்காதலாக மாற இருவரும் கணவன்-மனைவி போல் வாழத்தொடங்கினர்.

ttt

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் ராஜதுரை, திவ்யா மற்றும் 2 குழந்தைகளுடன் அந்த வீட்டில் இருந்துள்ளார். அப்போது ராஜதுரையும், திவ்யாவும் உல்லாசமாக இருப்பதற்கு சிறுவன் இடையூறாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால்  சிறுவனை இருவரும்  பிரம்பால் அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதனால் சிறுவனின் உடலில் வீக்கம் ஏற்பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே மருந்து வாங்கி சிகிச்சை கொடுத்து வந்துள்ளனர்.  

tt

இந்நிலையில் நேற்று காலை முதல் சிறுவன் தொடர்ந்து மயக்கநிலையில் இருந்தான். இதனால் பதறிய இருவரும் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்க சம்பவ இடத்துக்கு வந்த பரிசோதனை செய்த அவர்கள் சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனின் தாய் திவ்யா, கள்ளக்காதலன் ராஜதுரை ஆகியோரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் அவர்கள் இருவரும் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.