‘அடப்பாவி ஆறு குழந்தை பொறந்ததுக்கப்புறமும் பொண்டாட்டிய சந்தேகப்படறியே “கோபத்தில் குழந்தையை கொன்றார்.. 

 

‘அடப்பாவி ஆறு குழந்தை பொறந்ததுக்கப்புறமும் பொண்டாட்டிய சந்தேகப்படறியே “கோபத்தில் குழந்தையை கொன்றார்.. 

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டுக்கருகேயுள்ள பாவ்நகர் மாவட்டம் கட்தா தாலுகாவின் விகாரியா கிராமத்தில் உள்ள ஒருவர் வீட்டில் திங்கள்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது.கலுநாயக் என்பவரும்,மஞ்சுளா என்ற பெண்ணும் 12 ஆண்டுகளுக்கு முன்னால் திருமணம் செய்து கொண்டதில் அவர்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர் .

ராஜ்கோட்டில் மனைவிக்கு கள்ளக்காதல் இருக்கும் சந்தேகத்தால் எழுந்த சண்டையில் கோடரியால் தனக்கு பிறந்த 20 நாள் குழந்தையை ஒரு தந்தை கொலை செய்தார்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டுக்கருகேயுள்ள பாவ்நகர் மாவட்டம் கட்தா தாலுகாவின் விகாரியா கிராமத்தில் உள்ள ஒருவர் வீட்டில் திங்கள்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது.கலுநாயக் என்பவரும்,மஞ்சுளா என்ற பெண்ணும் 12 ஆண்டுகளுக்கு முன்னால் திருமணம் செய்து கொண்டதில் அவர்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர் .இந்நிலையில் கலுநாயக் மனைவி மீது சந்தேகப்பட்டார் .அவருக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக வந்த சந்தேகத்தால் இருவருக்கும் அடிக்கடி சண்டை நடந்தது.

கடந்த திங்கள் கிழமை வேலைக்கு  போய்விட்டு கலுநாயக் வந்தபோது மறுபடியும்  சண்டை நீடித்தது. அப்போது கோபத்தில் கையிலிருந்த கோடாரியால் அங்கே தூங்கிக்கொண்டிருந்த 20நாள் குழந்தையை அவர் தாக்கினார் .இதனால் அந்த குழந்தை அங்கேயே இறந்து போனது .குழந்தையையே காப்பாற்ற குறுக்கே வந்த மஞ்சுளாவுக்கும் அடிவிழுந்ததில் அவருக்கும் காயம் ஏற்பட்டது .பிறகு கலுநாயக் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பக்கத்து வீட்டுக்காரரால் மஞ்சுளா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .