ஆசைவார்த்தை… 9 மாதமாக உல்லாசம்… கர்ப்பமான 13 வயது சிறுமி!- போக்ஸோவில் சிக்கிய இளைஞர்

 

ஆசைவார்த்தை… 9 மாதமாக உல்லாசம்… கர்ப்பமான 13 வயது சிறுமி!- போக்ஸோவில் சிக்கிய இளைஞர்

ஆசைவார்த்தை காட்டி 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞரை காவல்துறையினர் போக்ஸோவில் கைது செய்தனர்.

மயிலாடுதுறை அருகே திருவெண்காடு பஞ்சந்தாங்கி தெருவைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் மகன் அருண் (26). டைல்ஸ் வேலை பார்த்து வந்த இவர், அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது, வீட்டில் இருந்த உமா ( பெயர் மாற்றம்) என்ற 13 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வந்துள்ளார். இதை நம்பிய உமா, அருணின் ஆசைக்கு இணங்கியுள்ளார். இதை பயன்படுத்தி கொண்ட அருண், உமாவை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்த நிலையில், உமாவுக்கு நேற்று முன்தினம் திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உமாவை அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுமி 5 மாத கர்ப்பம் என்று தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இது குறித்து உமாவிடம் விசாரித்துள்ளனர். அப்போது, ஆசைவார்த்தை கூறிய தன்னை அருண் பாலியல் பலாத்காரம் செய்தாக உமா கூறியுள்ளார்.

இதையடுத்து, உமாவின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், சிறுமி உமாவை அருண் தொடர்ந்து 9 மாத காலமாக பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அருணை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.