“உன் பெட் ரூம் வீடியோ பேஸ் புக்கில் வந்துடும் ” -மிரட்டிய புகுந்த வீட்டினர் -அடுத்து புது பெண் எடுத்த முடிவு .

 

“உன் பெட் ரூம் வீடியோ பேஸ் புக்கில் வந்துடும் ” -மிரட்டிய புகுந்த வீட்டினர் -அடுத்து புது பெண் எடுத்த முடிவு .

இரண்டாவது திருமணம் செய்த பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்த முயற்சி செய்த கணவர் மற்றும் அவரின் குடுமபத்தினர் கைது செய்யப்பட்டனர்

“உன் பெட் ரூம் வீடியோ பேஸ் புக்கில் வந்துடும் ” -மிரட்டிய புகுந்த வீட்டினர் -அடுத்து புது பெண் எடுத்த முடிவு .

சென்னை அடையார் சாஸ்திரி நகரில் உள்ள தனியார் விடுதியில் வசித்து வருபவர் 38 வயதான கல்பனா . இவர், சொந்த ஊர் கும்பகோணம் .இவர் அங்கு வேலை பார்க்கும்போது பேஸ் புக் மூலம் சென்னையை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரோடு பழகினார் .ஏற்கனவே கணவன் மற்றும் குழந்தைகளை பிரிந்து வாழ்ந்த கல்பனாவை வெங்கடேஷ் திருமணம் செய்து கொள்வதாக கூறினார் .அதை நம்பி அந்த பெண் சென்னைக்கு வந்தார் .அப்போது அவர் அந்த கல்பனாவை ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார் .
அதன்பிறகு சில நாட்கள் கழித்து வெங்கடேஷ், தனது தந்தை ரங்கசாமி (66), தாயார் விஜயா (51), தங்கை புவனேஸ்வரி (30) ஆகியோரை வீட்டுக்கு அழைத்து வந்து கல்பனாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
பிறகு பிரசன்ன வெங்கடேசின் பெற்றோர் மற்றும் அவருடைய தங்கை ஆகியோர் கல்பனாவிடம், “வீட்டுக்கு ஒருவரை அழைத்து வருவோம். அவருடன் நீ சந்தோஷமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பிரசன்ன வெங்கடேசுடன் நீ படுக்கையில் நெருக்கமாக இருக்கும் ஆபாச படங்களை இணையதளத்தில் வெளிவிட்டு விடுவோம்” என்று மிரட்டினர்.
அப்போதுதான் கல்பனாவுக்கு, அவர்கள் 3 பேரும் தன்னை விபசாரத்தில் ஈடுபடுத்த முயற்சி செய்வது தெரிந்தது. அதற்கு மறுத்த கல்பனாவை அடித்து உதைத்ததுடன், அவரிடம் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சத்தையும் பறித்துக்கொண்டனர்.இதனால் கல்பனா அவர்களிடமிருந்து தப்பி வந்து ,அவரின் கணவரை பற்றி விசாரித்த போது அவர் ஏற்கனவே திருமணமானவர் என்று தெரிந்துகொண்டார் .அதனால் அதிர்ச்சியடைந்த அவர் போலீசில் கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிந்து அந்த குடும்பத்தினர் அனைவரையம் கைது செய்தனர்

“உன் பெட் ரூம் வீடியோ பேஸ் புக்கில் வந்துடும் ” -மிரட்டிய புகுந்த வீட்டினர் -அடுத்து புது பெண் எடுத்த முடிவு .