"உடைஞ்ச பீர் பாட்டிலால் உடைகளை கிழித்து.." -பார்ட்டிக்கு போன பெண்ணுக்கு நண்பர்களால் நடந்த பயங்கரம்.

 
rape


ஒரு பெண்ணை பார்ட்டியில் வைத்து பாலியல் கொடுமை செய்த மூவரை போலீஸ் கைது செய்தது .

Woman, 21, gangraped by drunk friend, two others in Maharashtra’s Ambernath [Represenative image]
மகாராஷ்டிராவின் மும்பை பெருநகரப் பகுதியில் (எம்எம்ஆர்) உள்ள அம்பர்நாத்தில் வசிக்கும் 21 வயதான பெண் ,ஜனவரி 2 அன்று மாலை,வேளைக்கு போய்விட்டு  வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார் .அப்போது அதே பகுதியில் வசிக்கும் அவரின் ஆண் நண்பர், அந்த பெண்ணை அங்கு ஒரு பார்ட்டிக்கு வருமாறு கட்டாய படுத்தி கூட்டி சென்றார் .அப்போது அங்கு ஏற்கனவே காத்திருந்த இரண்டு ஆண்களுடன் சேர்ந்து அனைவரும் மது குடித்தனர் . 

அதன் பிறகு அந்தப் பெண் அந்த மூன்று பேரால் சிவாஜி நகரில் உள்ள குடிசைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர்கள் உடைந்த பீர் பாட்டிலைப் பயன்படுத்தி,அந்த பெண்னின் உடைகளை கிழித்து ,அவருக்கு  கொலை மிரட்டல் விடுத்து,  அவரது நண்பர்கள் அனைவரும் சேர்ந்து அவரை  பாலியல் வன்கொடுமை செய்தனர். அவர் அங்கிருந்து தப்பிக்க முயன்றபோது, ​​​​அவர்கள் அவரை தடுத்து நிறுத்தி அவரை  இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக உடல் ரீதியாக துன்புறுத்தினார்கள் .பின்னர் அந்த பெண் வீட்டுக்கு வந்து தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி கூறியதும் ,அவர்கள் போலீசில் புகார் தந்தனர் .போலீசார் வழக்கு பதிந்து அந்த மூன்று பேரையும் கைது செய்தனர் .