ராத்திரி ஏன் லேட்டா வந்த என்று கேட்ட கணவன் மீது ஆசிட் வீசிய மனைவி

 
a

எங்கே சென்று இருந்தாய் ராத்திரியில் வீட்டுக்கு வருவதற்கு ஏன் இவ்வளவு லேட் ஆனது என்று கேட்ட  கணவன் மீது ஆசிட்  எடுத்து வீசியதில் முகம் முழுவதும் வெந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் கணவர்.  உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்திருக்கிறது இந்த அதிர்ச்சி சம்பவம் .

உத்திரப் பிரதேச மாநிலத்தில் கான்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதி கூப்பர் கஞ்ச்.  இப்பகுதியில் வசித்து வருபவர் தப்புகுப்தா. இவரின் மனைவி பூனம்.

சம்பவத்தன்று பூனம் வெளியே சென்று இருக்கிறார்.  இரவு தாமதமாக வீடு திரும்பி இருக்கிறார்.   உடனே கணவர் தப்பு குப்தா,  எங்கே சென்றாய் இவ்வளவு நேரம் ஆகிவிட்டதே... ராத்திரி இவ்வளவு நேரம் ஆகிவிட்டது ஏன் லேட் என்று கேட்டிருக்கிறார்.  அதற்கு பூனம் சரியாக பதில் சொல்லாமல் இருந்திருக்கிறார்.  இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது . 

m

இதில் ஆத்திரமடைந்த தப்புகுப்தா,  மனைவி பூனத்தை கடுமையாக அடித்திருக்கிறார்.   இதில் ஆவேசம் அடைந்த பூனம் , ஓடிச்சென்று  பாத்ரூமில் இருந்த ஆசிட்டை எடுத்து வந்து கணவன் முகத்தில் வீசியிருக்கிறார்.   ஆசிட் பட்டதும் முகம்  எரிச்சடைந்து அலறி துடித்து இருக்கிறார். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் தப்பு குப்தாவை  பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள் .

பின்னர் தப்புகுப்தாவை மீட்டு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்து இருக்கிறார்கள்.   சம்பவம் குறித்து கேள்விப்பட்ட போலீசார் மருத்துவமனைக்கு சென்று தப்பு குப்தாவிடம் வாக்குமூலம் பெற்று இருக்கிறார்கள்.   தன் மீது ஆசிட் வீசிய மனைவி பூனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.  

 இது குறித்து வழக்கு பதிவு செய்து தப்புத்தாவின் மனைவி பூனத்திடம் போலீசார் விசாரணை நடத்திய போது ,  கணவர் தினமும் குடித்து விட்டு வந்து தகராறு செய்கிறார் .  அந்த ஆத்திரத்தில் தான் அவர் மீது ஆசிட் வீசினேன் என்று கூறியிருக்கிறார்.  மேற்கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.