"பெண்ணை மட்டையாக்கி வேட்டையாடிய வாலிபர்கள்.." -கணவனை பிரிந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

 
liquor


மது ஊற்றி கொடுத்து ஒரு பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர்களை போலீஸ் தேடி வருகிறது 

rape
கர்நாடக மாநிலம் தாவணகெரே தாலுகா மாசரஹள்ளி கிராமத்தில் கணவரை பிரிந்த ஒரு பெண் தனது சகோதரி வீட்டில் வசித்து வருகிறார்.அந்த பெண் தனியாக இருப்பதையறிந்த அந்த பகுதியில் வசிக்கும் பிரபு மற்றும் கிரண் என்ற இரு வாலிபர்கள் அடிக்கடி  அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தனர் .ஆனால் அந்த பெண் அவர்களை திட்டி அனுப்பியுள்ளார் .
இதனால் அந்த இருவரும் அந்த பெண்ணுக்கு மது ஊற்றி கொடுத்து பலாத்காரம் செய்ய திட்டமிட்டனர் .அதன் படி அந்த பெண் ஒரு நாள் தனியாக ஒரு தோட்டத்தில் இருந்த போது அந்த இருவரும் அந்த பெண்ணிடம் பாலியல் தொல்லை கொடுத்தனர் .பிறகு அவர்கள் அந்த பெண்ணை பிடித்து கட்டி வைத்து வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றி கொடுத்தனர் .பின்னர் அந்த பெண் மது மயக்கத்தில் இருந்த போது அந்த இரு வாலிபர்களும் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர் .அப்போது  அப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அந்த பெண்ணை காப்பாற்றி அங்குள்ள ஹாஸ்ப்பிட்டலில் சேர்த்தனர் .பின்னர் போலீசிலும் பொது மக்கள் புகார் தந்தனர் .போலீசார் வழக்கு பதிந்து அந்த இரு வாலிபர்களையும் தேடி வருகின்றனர்