"பொண்டாட்டிய பலாத்காரம் செய்வதை பக்கத்துல உக்காந்து ரசிக்கிறானே!" -கதறிய மனைவி -கதற வைக்கும் காரணம் .
உத்திரபிரதேச மாநிலம் படவுன் பகுதியில் தன்னை கண்டபடி திட்டிய குடியிருப்புவாசிகளை பழிவாங்க, ஒரு கணவர் தன்னுடைய மனைவியை, தன்னுடைய எதிரிகளைவிட்டு பலாத்காரம் செய்ய வைத்து அவர்களை ஜெயிலில் தள்ளினார் ..
கடந்த ஞாயிற்றுக்கிழமை உ.பி .மாநிலம் சஹாஸ்வான் பகுதியிலுள்ள காட்டுப் பகுதிக்கு, சாயங்காலம் மனைவியை பைக்கில் அழைத்து சென்றார் ஒரு இளைஞர்.அப்போது தன்னை கண்டபடி திட்டி தீர்த்த அந்த குடியிருப்புவாசிகளை பழிவாங்க, மனைவியை பலிகடாவாக்க துணிந்தார்.அதிலும் 2 பேர் மீது தீராத ஆத்திரம் இளைஞருக்கு இருந்தது.
எனவே அந்த காட்டுக்குள் சென்ற பிறகு, சம்பந்தப்பட்ட எதிரிகளான 2 நபர்களையும் போனை போட்டு வரவழைத்தார்.. அவர்களும் காட்டுக்கு வந்தனர்.. அப்போது, தன் மனைவியுடன் 2 முறை அவர்களை பாலியல் உறவுகொள்ள வைத்தார்.. பிறகு, காட்டுக்குள்ளிருந்தே போலீசுக்கு போனை போட்டு "ஒரு இளம்பெண்ணை 2 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக" சொல்லி புகாரும் தந்தார்..போலீசார் அந்த காட்டுக்குள் வந்து மொத்தமாக எல்லோரையும் அள்ளிக்கொண்டு போனது
போலீஸ் விசாரணையில் தன்னிடம் தகராறு செய்து அவமானப்படுத்திய இருவரை போலீசில் சிக்க வைப்பதற்காக இப்படியெல்லாம் நடந்து கொண்டது தெரிந்து போலீசார் திகைத்தனர்.. இறுதியில், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மற்றும் பலாத்காரம் செய்த அவரது நண்பர்கள் மீது என மொத்தமாக வழக்கு பதிவு செய்தனர்.