“விலை மாதராக சித்தரித்ததால் வலை வீசிய வாலிபர்கள்” -பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

 

“விலை மாதராக சித்தரித்ததால் வலை வீசிய வாலிபர்கள்” -பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

ஒரு பெண் தன்னை திட்டியதால் அவமானப்பட்ட ஒரு வாலிபர் அந்த பெண்ணை பழி வாங்க அவரின் போன் நம்பர் மற்றும் போட்டோவை ஆபாச வலைதளத்தில் வெளியிட்ட சம்பவம் அந்த பெண்ணின் வாழ்வில் புயலை வீசியுள்ளது .

“விலை மாதராக சித்தரித்ததால் வலை வீசிய வாலிபர்கள்” -பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வசிக்கும் மேத்தா என்பவர் ஒரு திருமண வெப்தளத்தில் தனக்கு கல்யாணத்திற்கு மணமகள் தேவையென்று விளம்பரம் செய்தார் .அதை பார்த்துவிட்டு அந்த ஊரை சேர்ந்த ஒரு பெண் ஒரு தொடர்பு கொண்டார் .இருவருக்கும் ஒருவருக்கொருவர் பிடித்து போனதால் இருவரும் சிலநாட்கள் போனில் அரட்டையடித்து வந்துள்னர் .விரைவில் திருமனமும் செய்து கொள்ளவிருந்தனர் .


ஆனால் திடீரென மேத்தாவிற்கு அந்த பெண்ணை பிடிக்காமல் போனது .அதனால் அவர் வேறு ஒரு பெண்ணை பார்த்து தனக்கு நிச்சயம் செய்து கொண்டார் .இந்த விஷயத்தை கேள்விப்பட்ட அந்த பெண் அவரை தொடர்பு கொண்டு கடுமையாக திட்டியுள்ளார் .


இதனால கடுமையான கோபமுற்ற மேத்தா அந்த பெண்ணின் போட்டோ மற்றும் போன் நம்பரை சமூக ஊடகத்தின் ஆபாச விபச்சார வெப் சைட்டில் வெளியிட்டுள்ளார் .அந்த பெண்ணின் போன் நம்பரை விபச்சார வலைதளத்தில் பார்த்த பல ஆண்கள் அந்த பெண்ணுக்கு இடைவிடாமல் போன் செய்து விபசாரத்துக்கு அழைத்துள்ளனர் .இது பற்றி கோபமடைந்தஅந்த பெண் இது மேத்தாவின் வேலையாகத்தான் இருக்கும் என்றெண்ணி அவர் மீது போலீசில் புகாரளித்தார் .
புகாரை பெற்றுக்கொண்ட சைபர் க்ரைம் போலீஸ் அந்த பெண் சொன்ன விவரத்தை வைத்து சமூக ஊடகத்தில் ஆராய்ந்த போ இது மேத்தாவின் வேலை என்று கண்டறிந்தனர் .பிறகு அவரை பிடித்து விசாரித்ததில் அவரும் உண்மையை ஒப்புக்கொண்டார் .அதனால் போலீசார் மேத்தா மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் .

“விலை மாதராக சித்தரித்ததால் வலை வீசிய வாலிபர்கள்” -பெண்ணுக்கு நேர்ந்த சோகம்