“என் புருஷோனோட கள்ள உறவை கைவிடு’- சொல்லியும் கேட்காத அக்காவை கொன்ற தங்கை

கணவருடன் ஏற்பட்ட கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் ஆத்திரமடைந்த தங்கை அக்காவை கொன்ற சம்பவம் சோழத்தரம் அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சோழத்தரம் அருகே அகர சோழத்தரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா (45). இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் தனது மூன்று பிள்ளைகளோடு தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் இவரது உடன் பிறந்த தங்கை சரிதா(40) வின் கணவர் மேகலைவன் என்பவருக்கும் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அடிக்கடி இதனை தங்கை சரிதா தட்டி கேட்கவே கள்ளக்காதலை கைவிட மறுத்தார் அக்கா சங்கீதா.
இந்நிலையில் ஆத்திரமடைந்த சரிதா தனது 17, 16 வயதுள்ள இரண்டு மகன்கள் உடன் சென்று தட்டி கேட்டார். அப்போது எதிர்பாராத விதமாக சரிதா தரப்பினரால் தாக்கப்பட்ட சங்கீதா சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து உயிரிழந்தார். அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த சோழத்தரம் போலீசார் இறந்த சங்கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சரிதா மற்றும் அவரது இரண்டு மகன்களை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். தனது கணவருடன் ஏற்பட்ட கள்ளக்காதலை கைவிட மறுத்த அக்காவை தங்கையே அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.