பழிக்கு பழி! மகளை கொன்ற மருமகனை வெட்டிய மாமியார்

 
கொலை

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மகளை கொன்ற மருமகனை பழியை  தீர்க்க அவரை வெட்டிய மாமியார் கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரி சிறையில் இருந்தபடியே திட்டமிட்டு இரட்டைக் கொலை - பதறவைக்கும்  பழிக்குப் பழி - BBC News தமிழ்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வடுகர்பாளையம் மங்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல். அவரது மனைவி சரோஜா (53). இவரது மகள் பிரியா என்கின்ற பராசக்தியை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தமிழரசன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு தமிழரசனுக்கும் (26) பிரியா என்ற பராசக்திக்கும் (19) இடையே குடும்ப பிரச்சனை காரணமாக பிரியாவை தமிழரசன் அடித்துக் கொன்றதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து ஆண்டிமடம் காவல் நிலையத்தில் சரோஜா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து தமிழரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் சிறையில் இருந்து தமிழரசன் வெளியில் வந்துள்ளார். இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் தற்பொழுது வரை நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் பேண்ட் சட்டை அணிந்து கொண்டு கையில் அரிவாளுடன் சரோஜா, தமிழரசன் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வெளியில் கட்டிலில் படுத்திருந்த தமிழரசனை, தன் மகளை கொன்ற பழியை தீர்க்க  சரமாரியாக வெட்டினார். தடுக்கச் சென்ற தமிழரசனின் தாயார் விமலாவையும் (45) அறிவாளால் வெட்டினார். இதில் தமிழரசன் மற்றும் அவரது தாய் விமலா ஆகிய இருவரும் வெட்டுப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தவர்களை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சம்பவம் குறித்து ஆண்டிமடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த இடத்திற்கு போலீசார் சென்று அவர்களை 108 மூலம் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தமிழரசன் விமலா ஆகிய இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தமிழரசன் மட்டும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.