ஆண் நண்பரை நம்பி சென்ற சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை

 
f

புது செல்போன் வாங்கித் தருகிறேன் என்று  ஆண் நண்பர் சொன்னதை நம்பி அவர் சொன்ன இடத்திற்கு சென்று இருக்கிறார் அந்த சிறுமி .  அங்கு சென்றதும் நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் .  அதை செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டி அங்கிருந்து ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்று இருக்கிறார்கள்.   அங்கு சென்றதும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பின்னர் இதைப் பற்றி வெளியே சொன்னால்  வீடியோவை வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டி அனுப்பி இருக்கிறார்கள்.  போலீசார் அந்த நான்கு பேரையும் கைது செய்துள்ளனர்.

df

 கர்நாடக மாநிலத்தில் ஹூப்பள்ளி பகுதியில் வசித்து வரும் அந்த 17 வயது சிறுமி தனது ஆண் நண்பர் செல்போன் வாங்கி தருகிறார் என்று சொன்னதால் அவர் சொன்ன இடத்திற்கு சென்று இருக்கிறார்.  அங்கு சென்றதும் பைக்கில் அந்த சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.   அங்கே அந்த நபரின் நண்பர்களும் இருந்திருக்கிறார்கள்.

 நாலு பேரும் சேர்ந்து சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்கள்.   அதை தங்களின் செல்போனில் வீடியோவாகவும் எடுத்து இருக்கிறார்கள். பின்னர் அந்த வீடியோவை காட்டி மிரட்டி ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்று இருக்கிறார்கள்.   அங்கேயும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பின்னர் இங்கே நடந்ததை எல்லாம் வெளியே சொன்னால் இந்த வீடியோவை வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டி இருக்கிறார்கள்.  அதன் பின்னர் அந்த சிறுமியை பைக்கில் அழைத்துக் கொண்டு போய் ஊருக்கு வெளியே விட்டு விட்டு தப்பி இருக்கிறார்கள்.

 வீட்டிற்கு வந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமையை சொல்லி இருக்கிறார்.  இதை அடுத்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளிக்க,  போலீசார் வன்கொடுமை வழக்கு பதிவு செய்து நான்கு பேரையும் கைது செய்துள்ளனர்.   பாதிக்கப்பட்ட சிறுமி நான்கு பேரையும் அடையாளம் காட்டி இருக்கிறார்.  இதை அடுத்து நான்கு பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.