காதலியின் அந்தரங்க பகுதியில் மிளகாய் வைத்த கொடூரன்

தனக்குத் திருமணம் ஆனது தெரிந்ததும் தன்னை விட்டு காதலி விலகியதால் ஆத்திரமடைந்து அவரை பாலியல் வன்கொடுமை செய்து காதலியின் அந்தரங்கப் பகுதியில் மிளகாய் வைத்து திணித்து சித்ரவதை செய்திருக்கிறான் கொடூரன். அதை போட்டோ எடுத்து வலைத்தளங்களில் வெளியிடுவதாகவும் மிரட்டி வந்திருக்கிறான். பாதிக்கப்பட்ட அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் அந்த வாலிபரை பிடிக்க தேடி வருகின்றனர்.
சூரத்தில் வசித்து வந்த நிகுஞ்ச் குமார் என்பவர் திருமணமாகி மனைவியுடன் வாழ்ந்து வந்திருக்கிறார். இவரது மனைவி கிராமத்தில் தனியாக வசித்து வந்ததால், சூரத்தில் அந்த வாலிபர் தனியாக வசித்து வந்திருக்கிறார் . அப்போது இளம் பெண் ஒருவர் இந்த வாலிபருக்கு அறிமுகமாக இருக்கிறார். அவரிடம் தனக்கு திருமணமான தகவலை மறைத்து பழகி வந்திருக்கிறார் .
இருவரும் காதலித்து வந்திருக்கிறார்கள் . ஒரு கட்டத்தில் நிகுஞ்ச் குமாருக்கு திருமணமானது அந்த பெண்ணுக்கு தெரிய வந்திருக்கிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம், தகராறு ஏற்பட்டிருக்கிறது . தகராறு ஒரு கட்டத்தில் முற்றியதை அடுத்து நிகுஞ்ச் குமாரிடமிருந்து பேசுவதை நிறுத்திக் கொண்டு அவருடன் பழகுவதையும் நிறுத்திக் கொண்டு அந்தப் பெண் காதலிப்பதிலிருந்து விலகி இருக்கிறார்.
இதில் ஆத்திரமடைந்த நிகுஞ்ச் குமார் தொடர்ந்து அந்த பெண்ணை காதலிக்க சொல்லி வற்புறுத்தி வந்திருக்கிறார். திருமணமானதை மறைத்து மனைவி ஒருத்தர் இருக்கிறார் என்பதையும் மறைத்து தன்னிடம் பொய் சொல்லி காதலித்ததை ஜீரணித்துக் கொள்ள முடியாத அந்த பெண் , இது பழக முடியாது காதலிக்க முடியாது என்று உறுதியாக சொன்னதை அடுத்து அந்த பெண்ணை கேபிள் வயரால் அடித்து சித்திரவதை செய்திருக்கிறார் .
பின்னர் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் . அத்தோடு ஆத்திரம் தீராத அந்த வாலிபர் காதலியின் அந்தரங்க பகுதியில் மிளகாய் திணித்து சித்திரவதை செய்து இருக்கிறார். அந்த பெண் துடிதுடித்ததை வீடியோ -போட்டோ எடுத்து அதை வலைத்தளங்களில் வெளியிடப் போவதாகவும் மிரட்டி இருக்கிறார்.
இதன் பின்னர் அந்தப் பெண் போலீசில் சென்று புகார் அளிக்க, போலீசார் வழக்குப்பதிவு செய்து நிகுஞ்ச் குமாரை கைது செய்ய தேடி வருகின்றனர் . பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை போலீசார் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்து உள்ளனர்.