அந்தரங்க பகுதியில் பிளாஸ்டிக் பைப்பை தீயில் உருக்கி ஊற்றிய கொடூரம்! 2 மணி அடித்ததில் மரணம்

 
m

தலைகீழாக கட்டி வைத்து இரண்டு மணி நேரம் அடித்ததோடு மட்டுமல்லாமல் பிளாஸ்டிக் பைப்பை தீயில் உருக்கி அந்தரங்கப் பகுதியில் ஊற்றியதில் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார் அந்த வாலிபர்.

மது போதைக்கு அடிமையானவர்களை போதை மறுவாழ்வு சிகிச்சை மையங்களில் சேர்த்து விடுகின்றனர்.  ஆனால் பல போதை மறுவாழ்வு சிகிச்சை மையங்கள் 
 கொலை செய்யும் மையங்களாகவே இயங்கி வருகின்றன.  அடித்து உதைத்து கொடூர சித்திரவதைகளை செய்து பலரை கொலை செய்து விட்டார்கள்.  இதனால் போதை மறுவாழ்வு சிகிச்சை மையங்கள் என்றாலே கொலை செய்யப்படும் இடமாகவே அதிர்ச்சியைத் தருகின்றன.

அப்படித்தான் குஜராத் மாநிலத்தில் மேசானா மாவட்டத்தைச் சேர்ந்த ஹர்திக் சுதார் என்கிற வாலிபரை  படான் மாவட்டத்தில் உள்ள ஜியோனா  போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்து இருக்கிறார்கள்.  அங்கு சிகிச்சை பெற்று வந்த அந்த வாலிபர் கடந்த 17ஆம் தேதி அன்று கழிவறைக்குச் சென்ற போது தனது மணிக்கட்டை அறுத்து தற்கொலைக்கு முயன்று இருக்கிறார். 

mu

 இதை அறிந்த அந்த மையத்தின் மேலாளர்,  இவரை கொடூரமாக அடித்து தாக்க உத்தரவிட்டிருக்கிறார் . அதை பார்த்து மற்றவர்கள் பயப்பட வேண்டும் என்று அப்படி செய்யச் சொல்லி இருக்கிறார் .  ஏழு பேர் சேர்ந்து அந்த வாலிபரை தலைகீழாக கட்டி தொங்க விட்டு பிளாஸ்டிக் பைப்பால் சரமாரியாக அடித்திருக்கிறார்கள்.   வெறும் ஐந்து நிமிடமோ பத்து நிமிடமோ அல்ல .  இரண்டு மணி நேரம் இப்படி கொடூரமாக தாக்கி இருக்கிறார்கள் .  அது மட்டுமல்லாமல் பிளாஸ்டிக் பைப்பை தீயில் போட்டு உருக்கி அதை அந்த வாலிபரின் அந்தரங்க பகுதியில் ஊற்றி இருக்கிறார்கள்.

 வேறு யாராவது இது மாதிரி செஞ்சா இப்படித்தான் தண்டனை கிடைக்கும் என்று எச்சரித்து இருக்கிறார்கள்.   இரண்டு மணி நேரம் நடந்த இந்த கொடூர தாக்குதலில் அந்த வாலிபர் பரிதாபமாக உயிரை விட்டிருக்கிறார் .

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுவரைக்கும் ஏழு பேரை கைது செய்துள்ளனர்.  தலைமறைவாக இருக்கும் அந்த  சிகிச்சை மையத்தின் மேலாளர் சந்தீப் பட்டேலை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர்.