இளம்பெண்ணை மின்கம்பத்தில் கட்டிவைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் செய்த செயல்

 
e

தன்னை கேலி கிண்டல் செய்த ஆட்டோ ஓட்டுநர்களை தட்டிக் கேட்டதற்காக அந்த இளம் பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்து சித்திரவதை செய்திருக்கிறார்கள். இந்த சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

 கன்னியாகுமரி பகுதியைச் சேர்ந்த இளம் பெண் கணவனை இழந்து 9 வயது மகளுடன் தனியாக வசித்து வருகிறார்.   இந்த பெண் மார்த்தாண்டம் பகுதியில் மசாஜ் சென்டர்  நடத்தி வருகிறார்.   வீட்டில் தனிமையில் இருப்பதால் மகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று நினைத்து அந்த பெண் மகளை காப்பகத்தில் சேர்த்து படிக்க வைத்திருக்கிறார்.

l

இந்த நிலையில் மசாஜ் சென்டருக்கு மேல்புறம் வழியாக செல்லும் போது அந்தப் பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் அந்த பெண்ணை கிண்டல் செய்து இருக்கிறார்கள். தனிமையில் உல்லாசமாக இருக்கலாமா என்று அழைத்திருக்கிறார்கள்.  இதனால் பயந்து நடுங்கிய அந்த பெண் தனது பாதுகாப்பிற்காக மிளகாய் பொடியையும் கத்தியும் கைவசம் வைத்திருக்கிறார்.

 நேற்று காலையில் வழக்கம் போல் அந்த பெண் மசாஜ் சென்டருக்கு போவதற்காக மேல்புறம் பகுதிக்கு சென்றபோது அங்கு நின்ற ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் மீண்டும் அவரை பார்த்து கிண்டல் செய்திருக்கிறார்கள்.  பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்று இருக்கிறார்கள் . அப்போது தான் கைவசம் வைத்திருந்த மிளகாய் பொடியை எடுத்து ஆட்டோ டிரைவர்கள் மீது எறிந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கிறார்.

 அப்போது அந்த ஆட்டோ ஓட்டுநர்களின் ஒரு சிலர் அந்தப் பெண்ணை பிடித்து கை ,கால்களை துணியால் கட்டி மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியிருக்கிறார்கள். இதில் காயமடைந்த அந்த பெண் ஒரு மணி நேரத்திற்கு மேல் மின்கம்பத்திலேயே கட்டி வைக்கப்பட்டு இருந்திருக்கிறார் . இது குறித்த புகைப்படங்கள் வலைத்தளங்களில் வைரல் ஆகி வந்திருக்கின்றன.  இதை அடுத்து இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற அருமனை போலீசார் அந்த பெண்ணை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி இருக்கிறார்கள்.  தனக்கு நேர்ந்த கொடுமைகளை பற்றி அந்தப் பெண் சொல்லவும் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த ஆட்டோ ஓட்டுநர்களை கைது செய்துள்ளனர்.