சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! தலைமறைவாக இருந்த காப்பக நிறுவனர் சிக்கினார்

 
n

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த தனியார் குழந்தைகள் காப்பக நிறுவனர் கைது செய்யப்பட்டுள்ளார்.  அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 நாகப்பட்டினத்தில் புதிய கடற்கரை சாலையில் அமைந்திருக்கிறது ‘நம்பிக்கை குழந்தைகள் காப்பகம்’. பரமேஸ்வரனும் அவரது மனைவி சூடாமணியும் இந்த காப்பகத்தை நடத்தி வருகின்றனர்.  காரைக்காலில் ஓ.என்.ஜி.சி.   உற்பத்தி பிரிவில் பணிபுரிந்து வருகிறார் பரமேஸ்வரன். 

ஏழை, எளிய மற்றும் தாய் தந்தையை இழந்த 18 வயதிற்கு உட்பட்ட 15 பெண் குழந்தைகள் 15 ஆண் குழந்தைகள் இந்த காப்பகத்தில் தங்கி இருக்கிறார்கள்.  இந்த காப்பகத்தில் தங்கி படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவி நம்பிக்கை குழந்தைகள் காப்பகத்தின் நிறுவனர் பரமேஸ்வரன்  தனக்கும் மற்ற சிறுமிகளுக்கும் பாலியல் தொல்லை அளித்து வருகிறார்.  தனி அறைக்கு அழைத்துச் சென்று தங்களிடம் அத்துமீறலில் ஈடுபடுகிறார் என்று நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

na

 இந்த புகாரின் பேரில் நாகை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பரமேஸ்வரன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  இதை அறிந்த பரமேஸ்வரன்,   குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டார். 

 தலைமறைவாக இருந்த பரமேஸ்வரன் போலீசார் தேடி வந்தனர்.   இதற்கிடையில்,  துணை ஆட்சியர் தலைமையில் வருவாய் துறையினர்,   குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் ஆகியோர் நம்பிக்கை குழந்தைகள் காப்பகத்திற்குச் சென்று அங்கு இருந்த சிறுமிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமிகளிடம் நடத்திய விசாரணையில்,  பரமேஸ்வரன் பாலியல் தொல்லை  அளித்து வந்தது   உறுதியாகி இருக்கிறது . பணம் பெறுவதற்காக சிறுமிகளை பலிகடா ஆக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. 

இதையடுத்து  நம்பிக்கை காப்பக குழந்தைகள்  அரசு காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.   அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு மனநல ஆலோசனை  அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

 தனிப்படை அமைக்கப்பட்டு தேடி தீவிர தேடுதல் வேட்டையில் தான் நாகப்பட்டினம் அருகே உறவினர் வீட்டில் பரமேஸ்வரன் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.  போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்துள்ளனர்.   காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.