இரண்டரை வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை! உடந்தையாக இருந்த கொடூர தாய்

 
கைது

சீர்காழியில் இரண்டரை வயது குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்த கள்ள காதலன் மற்றும் துணை போன தாயும் கைது செய்யப்பட்டார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான  இரண்டரை வயது பெண் குழந்தை மற்றும் அவரது தாயும் வசித்து வருகின்றனர். குழந்தையின் தாய் திருமண ஆகிய நிலையில் முன்னதாக இரண்டு கணவரை பிரிந்து தற்போது மூன்றாவதாக பிரசாந்த் என்பவருடன் உறவில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது பிரசாந்துடன் பழகி 7 மாத கர்ப்பிணியான குழந்தையின் தாய், தனது கள்ள காதலனான பிரசாந்துடன் சேர்ந்து இருவரும் இரண்டரை வயது பெண் குழந்தையை, குழந்தை என்றும் பாராமல் பாலியல் ரீதியாக துன்புறுத்தலும், அடித்தும், சூடு வைத்தும் கொடுமை  செய்துள்ளனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து, இது குறித்து அவர்களிடம் கேட்டுள்ளனர். அப்போது அவர்கள் இருவரும் எங்கள் குழந்தையை நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என திமிராக கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அக்கம்பக்கத்தினர் இதுபோன்ற கொடூரமான செயல் ஈடுபட்ட இருவரையும் பிடித்து வைத்து, சைல்ட் லைன் எண் 1098 க்கு இது குறித்து  தகவல் அளித்துள்ளனர். 

இந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மயிலாடுதுறையில் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள் குழந்தையை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதித்து இது தொடர்பாக சீர்காழி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்று கொண்ட சீர்காழி அனைத்து மகளிர் காவல்நிலைய காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி தலைமையிலான காவலர்கள் விசாரணை மேற்கொண்டு, குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்த தாய் மற்றும் அவரது மூன்றாவது கணவர் பிரசாந்தை இருவரையும் கைது செய்து போக்சோ வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்துள்ளனர். இரண்டரை வயது குழந்தையை அதுவும் பெற்ற தாயின் உதவியுடன் மூன்றாவது கணவர் பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் சீர்காழி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.