3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- வழக்கறிஞர் சிறையிலடைப்பு

 
c

மூணு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கறிஞர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 கரூர் மாவட்டத்தில் குளித்தலை அடுத்த இனுங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனியப்பன்.  55 வயதான இவர் வழக்கறிஞர்.  திருமணமான பழனியப்பன் திருச்சி குளித்தலை நீதிமன்றங்களில் வழக்குகளை நடத்தி  வந்துள்ளார். 

bl

 கடந்த 15ஆம் தேதி அன்று இவர் இனுங்கூரில் வீட்டில் இருந்தபோது பக்கத்து வீட்டில் வசிக்கும் மூன்று வயது சிறுமி விளையாடுவதற்காக வீட்டிற்குள் வந்திருக்கிறார். அந்த  சிறுமிக்கு பழனியப்பன் பாலியல் தொல்லை அளித்திருக்கிறார்.  அந்த சிறுமி வீட்டிற்கு ஓடியதும் தன் தாயிடம் இதைப் பற்றி சொல்லி இருக்கிறார்.

 இதைக் கேட்டு ஆத்திரமடைந்த அந்த தாய் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பழனியப்பன் மீது புகார் அளித்திருக்கிறார்.  இதன் பின்னர் போலீசார் பழனியப்பன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.  கரூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்துள்ளனர் போலீசார்.