7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த உறவினர்!

 
rape

திருப்பூரில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த  சிறுமியின் உறவினருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து  திருப்பூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
 
திருப்பூர் மாவட்டம் அவினாசி அடுத்த சேயூர், தேவேந்திரன் நகர் பகுதியை சேர்ந்தவர் நடராஜ் (47). இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் தேதி அதே பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் 7 வயது சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

இதுகுறித்து அந்த சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் தாயார் அவிநாசி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளார்.  இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், போக்சோ வழக்கு பதிவு செய்து நடராஜனை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை திருப்பூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்து வழக்கின் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுமியின் உறவினரான நடராஜனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், 15 ஆயிரம் அபராதம் விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி சுகந்தி  தீர்ப்பளித்தார்.