பாதிரியார் லேப்டாப் - 80 பெண்களின் ஆபாச வீடியோக்கள்

 
p

பாதிரியார் பெனடிக் ஆன்றோவின் லேப் டேப்பினை  சைபர் கிரைம் போலீசார் கைப்பற்றி உள்ளார்கள்.  அதில் 80 பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோக்கள் இருந்துள்ளன. இதையடுத்து பாதிரியாரை பிடிக்க இரண்டு அடிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.  தனிப்படி நெருங்கிவிட்டதால் பாதிரியாரே சரணடைந்துவிடும் நிலை இருக்கிறது.

 கன்னியாகுமரி மாவட்டத்தில் கொல்லங்கோடு அடுத்த பாத்திமா நகரைச் சேர்ந்தவர் பெனடிக் ஆன்றோ.  29 வயதான இந்த வாலிபர் குழித்துறையை தலைமையிடமாகக் கொண்ட சீரோ மலங்கரை கத்தோலிக்க சபையில் பாதிரியாராக இருந்துள்ளார்.  கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தக்கலை அடுத்த பிலாங்காலை சர்ச் பாதிரியாராக பொறுப்புக்கு வந்திருக்கிறார்.

pe

 இந்த நிலையில் பாதிரியார் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள். வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.  சர்ச்சுக்கு வரும் பெண்களிடம் இரட்டை அர்த்தத்தில் வாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜ்களின் ஸ்கிரீன்ஷாட்களும் ஆபாச வீடியோ காலிங் ஸ்கிரீன் ஷாட் காட்சிகளும் வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றன. 

 பாதிரியார் மீது நர்சிங் மாணவி ஒருவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் புகார் மனு ஒன்று அளித்தார்.   இந்த மனு தொடர்பாக மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் விசாரணை நடந்து வந்தது.   இதற்கிடையில் பாதிரியாரின் லீலைகள் பெயரில் அவரது ஆபாச வீடியோக்கள் போட்டோக்கள்,  வாட்ஸ் அப் சாட்டிங் பதிவுகள் வலைத்தளங்களில் பரவி வந்தன.  இதனால் பாதிரியார் தலைமறைவாகிவிட்டார் .

 பாதிரியார் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம் , பெண்களிடம் ஆபாசமாகவும் நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பாதிரியார் குறித்த போலீஸ் விசாரணையில் பல கிடைத்த தகவல்கள் வெளியாகி வருகின்றன.  குமரி மாவட்டம் மட்டுமல்லாது சென்னையைச் சேர்ந்த இளம் பெண்களும் பாதிரியார் இடம் ஏமாந்திருக்கிறார்கள்.

pp

 சென்னையில் திருமண வீட்டிற்கு பிரார்த்தனை செய்யச் சென்ற இடத்தில் ஒரே நாளில் அங்கு ஒரு இளம் பெண்ணை பாதிரியார் தன் வலையில் வீழ்த்தி இருக்கிறார். தன்னுடன் தொடர்பில் இருந்த அந்த பெண்ணுக்கு பாதிரியார் திருமணம் செய்து வைத்தது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது . போலீசாரிடம் பாதிரியாரின் லேப்டாப் சிக்கி இருக்கிறது.  அதை ஆய்வு செய்தபோது 80க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள் போட்டோக்கள் இருந்திருக்கின்றன.  பாதிரியார் ஏராளமான பெண்களை ஏமாற்றி இருக்கலாம் என்று போலீசார் இதன் மூலம் நினைக்கின்றனர்.

 இந்த நிலையில் தனிப்படை போலீசார் தன்னை நெருங்கி விட்டதால் தலைமறைவாக இருக்கும் பாதிரியார் சரணடைய முடிவு செய்திருப்பதாக தகவல் வர வெளியாகி இருக்கின்றன.  பாதிரியார் கைது செய்யப்பட்ட பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக புகார் அளிக்கலாம் என்று போலீசார் தெரிவித்திருக்கிறார்கள்.  பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் புகார் அளிப்பவர்களின் பெயர் விவரங்கள் ரகசியம் பாதுகாக்கப்படும்.  ஆன்லைன் மூலமாக அனுப்பி வைக்கலாம். பாதிரியாரின் ஆபாச வீடியோக்கள் எங்கிருந்து பரப்பப்படுகிறது என்பது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.