போலீசாரை தாக்கிய சாராய கும்பல்- எஸ்.ஐ உள்பட 3 போலீசார் மருத்துவமனையில் அனுமதி!

 

போலீசாரை தாக்கிய சாராய கும்பல்- எஸ்.ஐ உள்பட 3 போலீசார் மருத்துவமனையில் அனுமதி!

வேலூர்

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த அல்லேரி மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சும் கும்பல் தாக்கியதில் 3 காவலர்கள் படுகாயமடைந்தனர்.

அணைக்கட்டு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, அப்பகுதியில், சப்- இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் 7 பேர் கொண்ட போலீஸ் குழுவினர் அல்லேரி மலை கிராமத்தில் சோதனை மேற்கண்டனர்.

போலீசாரை தாக்கிய சாராய கும்பல்- எஸ்.ஐ உள்பட 3 போலீசார் மருத்துவமனையில் அனுமதி!

பின்னர், அங்கிருந்து நெல்லி மரத்து கொல்லை பகுதிக்கு போலீசார் பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, வழியில் மரங்கள் வெட்டி போடப்பட்டு இருந்ததால், பொலீசார் பைக்குகளை நிறுத்திவிட்டு அவற்றை அப்புறப்படுத்த ஆரம்பித்தனர்.

அப்போது, சாராய வியாபாரி கணேசன் உள்ளிட்ட 20 பேர் கொண்ட கும்பல் போலீசாரை வழிமறித்து சராமாரியாக தாக்கியுள்ளனர்.

போலீசாரை தாக்கிய சாராய கும்பல்- எஸ்.ஐ உள்பட 3 போலீசார் மருத்துவமனையில் அனுமதி!

சாராய கும்பல் நடத்திய தாக்குதலில் ராகேஷ் என்ற காவலர் மற்றும் எஸ்எஸ்ஐ சிவகுமார் மற்றும் ஒரு பெண் காவலர் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.
ராகேஷ் மயக்க நிலையில் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.