பலகாரம் சாப்பிட்ட வீட்டிலேயே பலாத்காரம் -விருந்தாளியை விரட்டிய ஊர் மக்கள்

 

பலகாரம் சாப்பிட்ட வீட்டிலேயே பலாத்காரம் -விருந்தாளியை விரட்டிய ஊர் மக்கள்

ஒரு வீட்டுக்கு விருந்தாளியாக வந்த வாலிபர் அந்த வீட்டிலேயே விருந்து சாப்பிட்டு விட்டு அந்த வீட்டிலிருந்த இரண்டு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தால் அந்த ஊர் மக்கள் ஒன்று திரண்டு அந்த வாலிபரை கொலை செய்ய முயன்றபோது போலீஸ் நிலையத்தில் அந்த வாலிபர் தஞ்சம் புகுந்தார்.

பலகாரம் சாப்பிட்ட வீட்டிலேயே பலாத்காரம் -விருந்தாளியை விரட்டிய ஊர் மக்கள்

மத்திய பிரதேசத்தின் தாமோ மாவட்டத்தில் உள்ள போபாலில் உள்ள உறவினர் வீட்டுக்கு ஒரு 19 வயது வாலிபர் விருந்தாளியாக கடந்த சனிக்கிழமையன்று வந்திருந்தார் .அப்போது அவருக்கு காலையில் பலகாரம் சாப்பிட கொடுத்த அந்த வீட்டு பெண், மதியம் அவருக்கு விருந்து வைப்பதற்காக கடைக்கு காய் கரிகள் வாங்க சென்றார் .அப்போது அவரின் இரண்டு வயது மகள் மற்றும் 5 வயது மகளை வீட்டிலே அவரிடம் பாதுகாப்பாக பார்த்துக்க சொல்லிவிட்டு கடைக்கு சென்றுள்ளார் .
அந்த நேரம் அந்த வாலிபர் அந்த வீட்டிலிருந்த இரண்டு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததுவிட்டார் ,.இதனால் அந்த சிறுமி காயங்களோடு மயங்கி கீழே விழுந்துள்ளார் .அதை பார்த்த அந்த கிராமத்து மக்கள் அந்த வாலிபரை அடிக்க ஒன்று கூடியதும், அந்த வாலிபர் அங்குள்ள காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தார் .அப்போது கடைக்கு போயவிட்டு வீட்டுக்கு வந்த அந்த குழந்தையின் தாயார் இந்த காட்சியை கண்டு திடுக்கிட்ட போது அந்த வீட்டிலிருந்த இன்னொரு ஐந்து வயது சிறுமி அந்த விருந்தாளி வந்த வாலிபர் செய்த பலாத்கார விஷயத்தினை தாயிடம் விவரித்தார்.உடனே அந்த தாய் அந்த வாலிபர் மீது போலீசில் புகார் கொடுத்தார் .போலீசார் அந்த வாலிபரை ஊர் மக்களிடமிருந்து காப்பாற்றி அவர் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் . .

பலகாரம் சாப்பிட்ட வீட்டிலேயே பலாத்காரம் -விருந்தாளியை விரட்டிய ஊர் மக்கள்