"சீக்கிரம் செஞ்சிட்டு போடா ,போலீஸ் வந்துட போவுது" -அவசரப்பட்ட அழகி -பாதாள அறைக்குள் நடந்த பலான வேலை

 
sex work

ஒரு லாட்ஜின்  கழிவறைக்குள் ரகசிய அறை அமைத்து விபசாரம் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். 

அறைகளில் தேடிய போது தெரியவில்லை
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஒலல்கெரே டவுன் பகுதியில் தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இந்த தங்கும் விடுதியில் விபசாரம் நடப்பதாக போலீக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் ஒலல்கெரே போலீசார் தங்கும் விடுதிக்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது கழிவறையின் சுவரில் சந்தேகப்படும்படியாக டைல்ஸ் பதிக்கப்பட்டது போன்ற மூடி இருப்பதை போலீசார் கண்டுப்பிடித்தனர்.
அந்த டைல்ஸை உடைத்து பார்த்த போது அந்த கழிவறைக்குள் ரகசியமாக ஒரு அறை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரகசிய அறைக்குள் சென்று பார்த்தனர். அப்போது அந்த அறையில் இளம்பெண்ணும், ஆண் ஒருவரும் விபசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் அந்த அறையில் கட்டில், மின்விசிறி, ஏ.சி. உள்ளிட்ட வசதிகள் இருந்தது. இதையடுத்து இளம்பெண்ணை போலீசார் மீட்டனர். மேலும் அவருடன் இருந்த நபர் மற்றும் தங்கும் விடுதி ஊழியர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 
இதுபற்றி அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் மைசூருவை சேர்ந்த தங்கும் விடுதி உரிமையாளர் பணத்தாசை காட்டி வடமாநில இளம்பெண்களை அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளார். கடந்த ஓராண்டாக யாருக்கும் தெரியாமல் தங்கும் விடுதி கழிவறையில் ரகசிய அறை அமைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது. 
அங்கு விபச்சார அழகி, வாடிக்கையாளர், புரோக்கர் ஆகியாரை  கைது செய்த போலீஸார் அந்த பெண்ணை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.