“எம் பொண்டாட்டி என் நெஞ்சிலே மிதிக்கிறா சார்!” -போலீஸ் நிலையத்தில் சரணடைந்த கணவன்.

 

“எம் பொண்டாட்டி என் நெஞ்சிலே மிதிக்கிறா சார்!” -போலீஸ் நிலையத்தில் சரணடைந்த கணவன்.


மனைவியின் கொடுமை தாங்க முடியாத ஒரு கணவர், காவல்நிலையத்தில் அவர் மீது புகாரளிக்க சென்ற சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

“எம் பொண்டாட்டி என் நெஞ்சிலே மிதிக்கிறா சார்!” -போலீஸ் நிலையத்தில் சரணடைந்த கணவன்.


குஜராத்தின் அகமதாபாத்தைச் சேர்ந்த நவரங்க்புரா வட்டாரத்தில் வசிக்கும் ஸ்வப்னில் தோஷி (47), அவரது பெற்றோரின் அனுமதியின்றி 2011 இல் மினல் தோஷி (41) என்பவரை மணந்தார்.அதன் பிறகு அந்த தோஷியின் மனைவிக்கும் அவரின் மாமியாருக்குமிடையே அடிக்கடி தகராறு வநதுள்ளது .இந்த குடும்ப பிரச்சினையில் தோஷி மிகவும் மன வேதனையடைந்தார் .இந்நிலையில் அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது .இப்போது அந்த மகனுக்கு எட்டு வயது ஆகிறது .ஆனாலும் அவர்களின் குடும்ப சண்டை தீரவில்லை .அதனால் அந்த தம்பதிகள் தோஷியின் பெற்றோரை தனியாக விட்டுவிட்டு வேறு வீட்டில் வசிக்க தொடங்கினார்கள் .
அங்கும் அவர்களின் குடும்ப சண்டை தீரவில்லை .அதன் உச்சமாக அந்த பெண் அவரின் மாமியாரை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியுள்ளார் .இதை தட்டிகேட்ட அவரின் கணவரையும் நெஞ்சிலே மிதித்து உதைத்துள்ளார் .அதனால் அந்த குடும்பத்தினர் அனைவரும் உறவினர் வீட்டில் சாப்பிட்டு காலத்தை தள்ளியுள்ளார்கள் .இதற்கிடையே பிப்ரவரி 4ம் தேதி மீண்டும் அந்த பெண் தன்னுடைய கணவர் செய்த சிறு தவறுக்காக அடித்து உதைத்துள்ளார் .இப்படி அடிக்கடி மனைவியிடம் அடி வாங்க முடியாத அந்த கணவர் அங்குள்ள காவல் நிலையம் சென்று தன்னுடைய மனைவி தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக 10 பக்கத்துக்கு அவர் செய்த கொடுமைகளை எழுதி புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த மினலை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

“எம் பொண்டாட்டி என் நெஞ்சிலே மிதிக்கிறா சார்!” -போலீஸ் நிலையத்தில் சரணடைந்த கணவன்.
rep image