கேஸ் சிலிண்டரை திறந்துவிட்டு அண்ணியை மிரட்டிய கொழுந்தன் - அடித்துக்கொன்ற அண்ணன்

 
a

கேஸ் சிலிண்டரை திறந்து விட்டு கொலை செய்து விடுவதாக கொழுந்தன் மிரட்டுகிறார் என்று அண்ணி புகார் அளிக்க,  ஆத்திரத்தில் தம்பியை கட்டையால் அடித்து கொன்று விட்டார் அண்ணன்.  சேலத்தில் நடந்திருக்கிறது இந்த பயங்கரம்.

 சேலத்தில்  செங்கல் அணை ரோட்டை சேர்ந்தவர் ராமசாமி . இவரது மனைவி பாக்கியம்.  இந்த தம்பதிக்கு செல்வம் -ராஜ கணபதி என்று இரண்டு மகன்கள்.  மாலா என்று ஒரு மகள் உள்ளார்.  செல்வம் -ராஜகணபதி சகோதரர்கள் இருவரும் கூலி தொழில் செய்து வந்து  வந்திருக்கிறார்கள்.

 செல்வத்துக்கு திருமணம்  ஸ்ரீதேவி என்கிற மனைவியின் இரண்டு மகள்களும் உள்ளனர் . இதே போன்று ராஜகணபதி மும்பையைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.  ஆனால் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ராஜகணபதியை பிரிந்து குழந்தைகளுடன் சென்றுவிட்டார் மனைவி. 

ம்

 அதன் பின்னர் தாயுடன் வசித்து வந்திருக்கிறார் ராஜகணபதி.   தந்தையின் பெயரில் உள்ள நிலத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செல்வம் வீடு கட்டி இருக்கிறார். அந்த வீட்டில் முதல் மாடியில் தனது மனைவி மகள்களுடன் வசித்து வந்திருக்கிறார் செல்வம் . கீழ் தளத்தில் தாயாருடன் வசித்து வந்திருக்கிறார் ராஜகணபதி .

சமீப காலமாக சொத்தில் தனக்கு பங்கு வேண்டும் என்று செல்வத்திடம் அடிக்கடி கேட்டு தகராறு செய்து வந்திருக்கிறார் ராஜ கணபதி.  இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக செல்வம்- ராஜ கணபதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது . அப்போது செல்வத்தின் மனைவி ஸ்ரீதேவியை தகாத வார்த்தையால் திட்டி இருக்கிறார் ராஜகணபதி.  உடனே ஸ்ரீதேவி போலீசில் சென்று கொழுந்தன் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி விட்டார். கேஸ் சிலிண்டரை திறந்து விட்டு கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார் என்று புகார் அளிக்க , போலீசார் ராஜகணபதியை அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்திருக்கிறார்கள்.  

சமாதானமாகி வீட்டிற்கு வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் மீண்டும் சொத்து பிரச்சனையால் தகராறு ஏற்பட்டிருக்கிறது.  இதில் ஆத்திரமடைந்த செல்வம் செங்கல், உருட்டு கட்டையை எடுத்து ராஜ கணபதியின் தலையிலும் முகத்திலும் அடித்திருக்கிறார் . படுகாயம் அடைந்த ராஜ கணபதி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார் . தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் ராஜகணபதி உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கின்றனர் . பின்னர் செல்வத்தை கைது செய்துள்ளனர்.