“படுக்கவும் விடமாட்டேங்குது ,நடக்கவும் விடமாட்டேங்குது” -கத்திய நாயின் உரிமையாளரை குத்திய நபர்கள்

 

“படுக்கவும் விடமாட்டேங்குது ,நடக்கவும் விடமாட்டேங்குது” -கத்திய நாயின் உரிமையாளரை குத்திய நபர்கள்


ஓர் குடியிருப்பில் ஒருவரின் நாய் எந்நேரமும் குரைத்து கொண்டிருந்ததால், அதனால் பாதிக்கப்பட்ட மூவர் அந்த நாயின் உரிமையாளரை கத்தியால் குத்தி கொலை செய்தார்கள்.

“படுக்கவும் விடமாட்டேங்குது ,நடக்கவும் விடமாட்டேங்குது” -கத்திய நாயின் உரிமையாளரை குத்திய நபர்கள்


உத்தரபிரதேசத்தின் சீதாபூர் மாவட்டத்தில் சித்தாலியில் உள்ள கஸ்பா பஜார் பகுதியில் சச்சின் குமார் என்பவர் ஒரு நாயை வளர்த்து வந்தார் .அந்த நாய் எப்போதும் அவர் வசிக்கும் குடியிருப்பில் குரைத்து கொண்டேயிருக்கும் .அதனால் அந்த குடியிருப்பில் வசிக்கும் பலரும் மிகவும் பாதிக்கப்பட்டனர் .பல முதியோர்கள் வாக்கிங் போகும் போதும் அவர்களுக்கு இடையூறாக இருக்கும் .மேலும் பல வீடுகளில் இருப்போரையும் தூங்க விடாமல் குரைத்து கொண்டே இருந்தது .அதனால் அந்த பகுதியில் குடியிருக்கும் பலர் அந்த நாயின் உரிமையாளர் குமாரிடம் புகார் கூறினார்கள் .ஆனால் அவர் அந்த நாய் குரைப்பதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தார்
அதனால் அந்த பகுதியில் கடந்த வாரம் அந்த நாயை அழைத்து கொண்டு குமார் வாக்கிங் சென்று கொண்டிருந்தார் .அப்போது அந்த குடியிருப்பில் வசிக்கும் உமா, ரோஹித் மற்றும் கோவிந்த் ஆகியோரை பார்த்து அந்த நாய் குரைத்தது .அதனால் அவர்கள் மிகவும் பயந்து கொண்டு ஓடினார்கள் .அதன் பிறகு அவர்கள் மூவரும் வீட்டிலிருந்து ஒரு கத்தியை எடுத்து வந்து ,அந்த நாயின் உரிமையாளர் குமாரை பல முறை பலமாக தாக்கினார்கள் .இந்த கத்தி குத்து காயத்தில் குமார் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார் .அதனால் அந்த பகுதியிலிருப்போர் குமாரை மருத்துவமனைக்கு தூக்கி சென்றார்கள் .ஆனால் போகும் வழியிலேயே அவரின் உயிர் பிரிந்தது .இந்த கொலை சம்பவம் பற்றி கேவிப்பட்ட போலீசார் அந்த உமா, ரோஹித் மற்றும் கோவிந்த் ஆகிய மூவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்தார்கள் .பின்னர் தீவிர விசாரணை மேற்கொண்டு விசாரித்து வருகிறார்கள்.

“படுக்கவும் விடமாட்டேங்குது ,நடக்கவும் விடமாட்டேங்குது” -கத்திய நாயின் உரிமையாளரை குத்திய நபர்கள்