தலையில் கல்லை போட்டு மூதாட்டி படுகொலை- நாடகமாடிய கணவன்

திண்டுக்கல்லில் தலையில் கல்லை போட்டு மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல், பிஸ்மி நகர் பகுதியில் வசித்து வருபவர் ஜெய்னுல்லா (வயது 70). இவர் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி முகமதாபீவி (64). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார் மகள் திருமணம் ஆகி சென்று விட்டார். ஜெய்னுல்லாவிற்கு குடிப்பழக்கம் உண்டு இதன் காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று 13.02.25 அதிகாலை ஜெய்னுல்லா வீட்டிலிருந்து கிளம்பி வெளியே சென்றுள்ளார் பின்னர் திரும்பி வந்து பார்த்த பொழுது தூங்கிக் கொண்டிருந்த மனைவி முகமதாபீவி தலையில் கல்லை போட்டு படுகொலை செய்யப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் முகமதா பீவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் மோப்பநாய் லக்கி வர வரவழைத்தனர் மோப்பநாய் வீட்டில் இருந்து 200 மீட்டர் தூரம் சென்று சாலையில் நின்று கொண்டிருந்த ஜெய்னுல்லா அருகே நின்றது இதனை அடுத்து ஜெய்னுல்லா மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தான் கொலை செய்யவில்லை என திரும்ப திரும்ப கூறி நாடகமாடினார். போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முகமதாபீவியின் நகையை வாங்கி ஜெய்னுல்லா அவரது உறவினருக்கு கொடுத்துள்ளார்.
இந்நிலையில் முகமதாபீவி தனது நகையை கேட்டு கணவர் ஜெய்னுலாவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு மது போதையில் வந்த ஜெயினுலாவிடம் மீண்டும் நகையை கேட்டு மனைவி முகமதாபீவி தகராறு செய்துள்ளார். சண்டை முடிந்து பின்னர் கணவன் மனைவி இருவரும் தூங்கி உள்ளனர் நள்ளிரவு எழுந்த ஜெய்னுல்லா ஆத்திரம் தீராமல் தூங்கிக் கொண்டிருந்த மனைவி தலையில் போட்டு படுகொலை செய்துள்ளார். பின்னர் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக மனைவியின் சடலத்துடனே இரவு முழுவதும் தூங்கி உள்ளார் பின்னர் அதிகாலை எழுந்து டீ குடிக்க டீ கடைக்குச் சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து தனது மனைவியை அடையாளம் தெரியாத நபர் கல்லை போட்டு படுகொலை செய்ததாக கூறி நாடகமாடியுள்ளார். குடும்ப பிரச்சனை காரணமாக மனைவியை கொலை செய்ததாக ஜெயனுல்லா போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் ஒத்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஜெய்னுல்லா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.