“என்னோட கார் பார்க்கிங்கில் ஏண்டா இப்படி செஞ்சே?” -தட்டி கேட்ட பக்கத்து வீட்டுக்காரருக்கு நேர்ந்த கதி.

 

“என்னோட கார் பார்க்கிங்கில் ஏண்டா இப்படி செஞ்சே?” -தட்டி கேட்ட பக்கத்து வீட்டுக்காரருக்கு நேர்ந்த கதி.


பக்கத்து வீட்டுக்காரரின் கார் பார்க்கிங்கில் கார் நிறுத்திய தகராறில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வருகிறார் .

“என்னோட கார் பார்க்கிங்கில் ஏண்டா இப்படி செஞ்சே?” -தட்டி கேட்ட பக்கத்து வீட்டுக்காரருக்கு நேர்ந்த கதி.


மகாராஷ்டிராவின் மும்பையில் சியோன் பகுதியில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் ஜாவேத் சவுத்ரி (35) என்பவரும் , கிருஷ்ணா மிஸ்ரா (32) என்பவரும் அருகருகே உள்ள பிளாட்டில் வசித்து வந்தார்கள் .மேலும் ஜாவேத்துக்கு அங்கு தனியாக ஒரு கார் பார்க்கிங் பகுதி இருக்கிறது .இந்நிலையில் அவரின் கார் பார்க்கிங்கில் ஜனவரி 30ம் தேதி கிருஷ்னா தன்னுடைய காரை நிறுத்தியுள்ளார் .இதை பார்த்து விட்ட ஜாவேத், கிருஷ்ணாவிடம் சென்று அவரின் காரை எடுக்க சொன்னார் .ஆனால் கிருஷ்ணா அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் . அதனால் இருவரும் மோதிக்கொண்ட பிறகு போலீசார் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினார்கள் .
அதன் பிறகு கடந்த செவ்வாயன்று மீண்டும் ஜாவேத்தின் பார்க்கிங்கில் கிருஷ்ணா தன்னுடைய காரை நிறுத்தினார் .இதனால் கோபமுற்ற ஜாவேத், அவரோடு கடுமையாக வாக்கு வாதத்தில் ஈடுபட்டார் .அப்போது அவரும் கிருஷ்ணாவும் மோதிக்கொண்டார்கள் .அப்போது எதிர்பாராவிதமாக கிருஷ்ணாவை ஜாவேத் பலமுறை அவரது வயிறு மற்றும் கழுத்தில் கத்தியால் குத்தி காயப்படுத்தினார் .
இந்த கத்தி குத்து தாக்குதலில் கிருஷ்ணா அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் கிடந்தார் .இதனால் அவரை அந்த பகுதியிலிருக்கும் சியான் மருத்துவமனையில் சேர்த்தனர் .உடனே கிருஷ்னாவின் மனைவி போலீசில் புகாரளித்தார் .போலிஸார் வழக்கு பதிந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் .

“என்னோட கார் பார்க்கிங்கில் ஏண்டா இப்படி செஞ்சே?” -தட்டி கேட்ட பக்கத்து வீட்டுக்காரருக்கு நேர்ந்த கதி.
Car thief at parking lot