கத்திமுனையில் இளம்பெண் பலாத்காரம் - ரவுடி மீது பாய்ந்தது குண்டாஸ்

 
h

காட்டு வழியில் தனியாகச் சென்ற பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி ஆபாசமாக போட்டோ எடுத்து பின்பு அந்த போட்டோவையும் காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது.

 நெல்லை மாவட்டத்தில் தச்சநல்லூரைச் சேர்ந்தவர்  ராமர்.  35 வயதான இந்த வாலிபர் மீது தச்சநல்லூர், பேட்டை, மானூர் உள்பட நெல்லை மாவட்டத்தின் பல காவல் நிலையங்களில் திருட்டு, கொள்ளை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன.  

k

 இந்த நிலையில் தான் கொலைமிரட்டல் , பாலியல் பலாத்கார வழக்கும் பதிவு செய்யப்பட்டிருந்ததில் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்து இருக்கிறது .

சில தினங்களுக்கு முன்பாக சத்திரம் புதுக்குளம் பகுதியில் 32 வயதான பெண் காட்டுப்பகுதியில் தனியாக சென்று கொண்டு இருந்திருக்கிறார்.  அப்போது மறைந்து நின்ற ராமர் திடீரென்று அவர் முன்பு பாய்ந்து கத்தியை காட்டி மிரட்டி ஆபாசமாக போட்டோ எடுத்திருக்கிறார்.  பின்னர் அந்த போட்டோவையும் காட்டி மிரட்டி அந்த பெண் மீது கத்தியால் குத்தி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடி இருக்கிறார்.

 காயங்களுடன் தப்பி வந்த அந்த இளம் பெண் பாளையங்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.   சம்பவம் குறித்து அறிந்த தச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்ததில்,  சத்திரம்புதுக்குளம் பகுதியில் ராமர் தலைமறைவாக இருப்பது தெரிய வந்ததும்  அவரை கைது செய்துள்ளனர். தொடர்ச்சியாக ராமர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நெல்லை ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ராமருக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.