போதைக்கு அடிமையாகி வேலை செல்லாத மகனை வெட்டி கொன்ற தந்தை

 
murder murder

போதை பழக்கத்துக்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் இருந்த மகனை வெட்டி கொன்ற தந்தை கைது செய்யப்பட்டார்.

murder

கோவை பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 57). ஓட்டல் ஒன்றில் பணியாற்றுகிறார். இவரது மகன் விஜயகுமார் ( 28), லேத் பட்டறை தொழிலாளி. விஜயகுமார் குடிப்பழக்கம் உடையவர். அவ்வப்போது வேலைக்கு செல்வதில்லை. இதனை விஸ்வநாதன் கேட்டும்போது தந்தை- மகன் இடையில் தகராறு ஏற்பட்டிருக்கிறது. விஜயகுமாருக்கும், அவரது தந்தைக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமான நிலையில், இரவு இருவருக்கும் பெரும் மோதல் வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதில் ஆத்திரமடைந்த விஸ்வநாதன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து விஜயகுமாரை சரமாரியாக வெட்டியுள்ளார். 

இதனால் சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து பரிதாபமாக உயிரழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த குனியமுத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த விஜயகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக விஸ்வநாதன் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலிசார் கைது செய்தனர். தந்தையே மகனை வெட்டி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.