கொல்லப்பட்ட மளிகை கடைக்காரர்… கோயில் அறையில் புதைக்கப்பட்ட கொடூரம்… பெண்ணுடன் சிக்கிய பிரபல ஜோதிடர்

 

கொல்லப்பட்ட மளிகை கடைக்காரர்… கோயில் அறையில் புதைக்கப்பட்ட கொடூரம்… பெண்ணுடன் சிக்கிய பிரபல ஜோதிடர்

மளிகை கடைக்காரர் ஒருவரை கோயில் கொன்ற புதைத்த பிரபல ஜோதிடர், பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடூர சம்பவம் கடலூரில் நடந்துள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கடந்த 12ம் தேதி மளிகை கடைக்காரர் கண்ணதாசன் காணாமல் போனார். இது குறித்த புகாரின்பேரில் காவல்துறையினர் அவரை தேடி வந்தனர். அப்போது, லிங்கா ரெட்டி பாளையத்தில் உள்ள கோயிலில் கண்ணதாசன் கொன்று புதைக்கப்பட்ட இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தனியாருக்கு சொந்தமான வேணுகோபால்சுவாமி கோயில் அறையில் புதைக்கப்பட்ட கண்ணதாசனின் உடலை காவல்துறையினர் தோண்டி எடுக்க முடிவு செய்தனர். கோயிலில் பகல் நேரத்தில் தோண்டினால் பிரச்னை வரும் என்று கருதிய காவல்துறையினர், இரவில் கண்ணதாசனின் உடலை தோண்டி எடுத்தனர். இதையடுத்து, முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறையினர், கண்ணதாசனை கொன்று புதைத்த பிரபல ஜோதிடர் கோபிநாத் (52), அவருடைய நண்பர் திருப்பதி (56), கண்ணதாசனின் கள்ளக்காதலி மஞ்சுளா (30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரபல ஜோதிடர் கோபிநாத், மளிகை கடைக்காரரை கொன்று கோயில் அறையில் புதைத்த சம்பவம் கடலூர் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.