டாக்சியில் சென்ற ஐ.டி.நிறுவன பெண் -தண்ணீர் கொடுத்த ட்ரைவர் -அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்

 

டாக்சியில் சென்ற ஐ.டி.நிறுவன பெண் -தண்ணீர் கொடுத்த ட்ரைவர் -அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்


டாக்சியில் சென்ற ஒரு ஐடி நிறுவன பெண் ஊழியரை அந்த டாக்சி ட்ரைவர் பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது

டாக்சியில் சென்ற ஐ.டி.நிறுவன பெண் -தண்ணீர் கொடுத்த ட்ரைவர் -அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்


மகாராஷ்டிராவின் புனேவில் ஒரு திருமணமான பெண்ணொருவர் ஒரு ஐடி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிகிறார் .இந்நிலையில் அந்த பெண் கடந்த மார்ச் மாதம் இறுதியில் தன்னுடைய ஆபீஸ் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பாமல் தன்னுடைய தோழிகளை பார்க்க விரும்பினார் .அதனால் அவர் ஒரு ஆப் மூலம் முந்துவா பகுதிக்கு செல்ல ஒரு டாக்சியை புக் செய்து அதில் பயணம் செய்தார் .பிறகு அந்த டாக்சி டிரைவர் அந்த பெண்ணிடம் .வீட்டிற்கு செல்லும்போது தன்னை அழைக்கும்படி அவரின் வாட்ஸ் அப் எண்ணை கொடுத்தார் .அதை பெற்றுக்கொண்ட அந்த பெண் தோழிகள் வீட்டிலிருந்து இரவு நேரத்தில் வர அந்த டாக்சி ட்ரைவரை அழைத்தார் .
அந்த பெண் கூப்பிட்டதும் அந்த டாக்சி ஓட்டுநர் தன்னுடைய டாக்சியை எடுத்துக்கொண்டு வந்த வந்த பெண்ணை அந்த இரவு நேரத்தில் அழைத்து சென்றார் .அப்போது அந்த டிரைவர் அந்த பெண்ணுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்தார் .அந்த தண்ணீரை குடித்த பெண்ணுக்கு மயக்கம் வந்துள்ளது ,அதன் பிறகு அந்த டாக்சி ட்ரைவர் அந்த பெண்ணை ஒரு லாட்ஜிற்கு கூட்டி சென்றார் .பிறகு அவரை ஆபாசமாக படமெடுத்துள்ளார் .பின்னர் அந்த படத்தினை காமித்து, சமூக ஊடகத்தில் அதை வெளியிடுவதாக மிரட்டி அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் ,பிறகு அந்த பெண் வீட்டிற்கு வந்து தன்னுடைய கணவருடன் அங்கு உள்ள காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த டாக்சி டிரைவரை கைது செய்தனர்

டாக்சியில் சென்ற ஐ.டி.நிறுவன பெண் -தண்ணீர் கொடுத்த ட்ரைவர் -அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்