சவ ஊர்வலத்தில் வெடி போட்டதில் தகராறு- இளைஞர் வெட்டி கொலை
![murder](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/c1d9944d6bcd4d252d6314a4f2cc996c.jpg)
சவ ஊர்வலத்தில் வெடி போட்டதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு இளைஞர்களை கைது செய்து வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை வைத்தியநாதபுரத்தில் வசித்து வந்த முன்னாள் ராணுவ வீரர் மனோகரன் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். முன்னாள் ராணுவ வீரரின் சவ ஊர்வலம் நேற்று முன்தினம் மாலையில் நடைபெற்ற பொழுது அதே பகுதியைச் சேர்ந்த சகோதரர்களான அருண் மற்றும் சூரிய பிரகாஷ் ஆகிய இருவரும் சேர்ந்து வெடி போடும் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வெடி போட்டதை சவ ஊர்வலத்தில் கலந்து கொண்ட அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் தட்டி கேட்டுள்ளனர்.
இதனால் இரு தரப்பினரிடயே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இறந்தவரின் உடலை அடக்கம் செய்த பின்பு வெடி போட்ட அருண் மற்றும் சூர்ய பிரகாஷ் ஆகிய இருவரும் தட்டிக் கேட்டவர்களை அருவாளை எடுத்து கொண்டு தட்டி கேட்ட இளைஞர்களை தாக்க முற்படும் பொழுது அருண் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக வைத்தியநாதபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் அஜித் குமார் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து கொலை வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் நிறுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.