“பணத்தையும் வாங்கிக்கொண்டு ,பிணமாக்கிட்டிங்களே” -நண்பர்களால் கடத்தப்பட்டு ,கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் கதறல்..

 

“பணத்தையும் வாங்கிக்கொண்டு ,பிணமாக்கிட்டிங்களே” -நண்பர்களால் கடத்தப்பட்டு ,கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் கதறல்..

ஒரு லேப் டெக்னீஷியனை அவரின் நண்பர்களே கடத்தி 30லட்ச ரூபாய் பிணயத்தொகையினை வாங்கிக்கொண்டு கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியலையை ஏற்படுத்தியுள்ளது .

“பணத்தையும் வாங்கிக்கொண்டு ,பிணமாக்கிட்டிங்களே” -நண்பர்களால் கடத்தப்பட்டு ,கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் கதறல்..
கான்பூரில் பார்ரா பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநராக பணிபுரியும் சஞ்சீத் யாதவ் என்ற 28 வயது வாலிபர் ஜூன் 22ம் தேதியன்று மாலை வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு போகும் வழியில் அவரின் நண்பர்களால் கடத்தப்பட்டார் .பிறகு கடத்திய நபர்கள் அவரின் குடும்பத்திற்கு போன் செய்து 30 லட்ச ரூபாயை கொண்டு வந்து கொடுத்தால் உங்கள் மகனை உயிரோடு விடுகிறோம் என்று மிரட்டியுள்ளார் .

“பணத்தையும் வாங்கிக்கொண்டு ,பிணமாக்கிட்டிங்களே” -நண்பர்களால் கடத்தப்பட்டு ,கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் கதறல்..இதை கேட்டு அதிர்ச்சியுற்ற அவரின் குடும்பத்தார் போலீசை தொடர்புகொண்டபோது அவர்கள் பணத்தை ஏற்பாடு செய்து எடுத்துக்கொண்டு அவர்கள் சொல்லுமிடத்திற்கு போக சொல்லினர் .
அவர்களின் பேச்சை கேட்ட அவரின் பெற்றோர் 30லட்சம் பணத்தோடு அவர்கள் சொன்ன இடத்திற்கு சென்று பணத்தை கொடுத்தனர் .பிறகு பணத்தை வாங்கிக்கொண்ட அவர்கள் அவரின் மகனை விடுவிக்காமல் ஓடிவிட்டனர் .அங்கு மறைந்திருந்து அவர்களை பிடிக்க முயன்ற போலீசார் அவர்களை பிடிக்க முடியாமல் கோட்டை விட்டனர் ,

“பணத்தையும் வாங்கிக்கொண்டு ,பிணமாக்கிட்டிங்களே” -நண்பர்களால் கடத்தப்பட்டு ,கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் கதறல்..இந்நிலையில் அவரின் மகன் சஞ்சீவை அந்த கடத்தல் காரர்கள் கொன்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது .இதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொல்லப்பட்ட சஞ்சீவின் உடலை தேடிவருகிறார்கள். சமூக ஊடகங்களில் அவரின் குடும்பத்தார் அழும் வீடியோ வைரலாகி வருகிறது .