சீரியல் நடிகையின் சின்னபுத்தி! சினிமாவில் நடிக்க வைப்பதாக சொல்லி இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!

 
d

சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தருவதாக சொல்லி இளம்பெண்ணை ஏமாற்றி நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ள  சம்பவம் நிகழ்ந்திருக்கிறது இதற்கு சீரியல் நடிகை ஒருவர்தான் உடந்தையாக இருந்திருக்கிறார் என்ற தகவல் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 கேரள மாநிலத்தில் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் சினிமா மீது கொண்ட ஆர்வத்தினால் சினிமாவில் நடித்த வாய்ப்பு தேடி வந்திருக்கிறார்.  அப்போது சீரியல் நடிகை ஒருவர் அந்த பெண்ணுக்கு அறிமுகமாகி இருக்கிறார் .  அவர் தனக்கு தெரிந்த நபர் மூலம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக சொல்லி இருக்கிறார்.   அதன்படியே  தனது ஆண் நண்பரை அந்த சிறுமி  இளம் பெண்ணுக்கு அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார்.

j

 அந்த ஆண் நண்பரும் சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தருகிறேன் என்று சொல்லி நம்பிக்கை கொடுத்திருக்கிறார்.   ஒரு நாள் திடீரென்று அந்த நபர் போன் செய்து சினிமாவில் நடிப்பை வாய்ப்பு வந்திருக்கிறது . அது சபந்தமாக அழைத்துப் போகிறேன்.   அது குறித்து பேச வேண்டும் என்று அந்த இளம் பெண்ணை அழைத்திருக்கிறார்.   

 அந்த குறிப்பிட்ட பிளாட்டுக்கு அழைத்து இருக்கிறார் .  இதனால் அச்சப்பட்டு கொண்ட அந்த இளம் பெண் அந்த சீரியல் நடிகைக்கு போன் செய்து இருக்கிறார்.  அவரும் நம்பிக்கையாகப்போ உனக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்ல உண்மைதான் என்று நம்பி அந்த இளம் பெண் அந்த பிளாட்டுக்கு சென்று இருக்கிறார்.   அங்கு அந்த பெண்ணுக்கு வாய்ப்பு வாங்கித்தருவதாக சொன்னவருடன் மேலும் சில ஆண்களும் இருந்திருக்கிறார்கள்.

 சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருகிறோம் என்று அது குறித்து பேசிக்கொண்டு இருந்திருக்கிறார்கள்.  அப்போது திடீரென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.   அந்த பெண் மறுப்பு தெரிவிக்க , சினிமாவில் வாய்ப்பு வேண்டும் என்றால்  சகித்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி பாலியல்சீண்டல் செய்து பின்னர் அங்கிருந்த அனைவரும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்.  இதில் அந்த பெண் அவர்களிடம் இருந்து தப்பித்து வெளியே வந்ததும்,   சீரியல் நடிகை ஒரு பெண் என்று நம்பினால் அவர் தன்னை இப்படி மோசடி செய்துவிட்டாரே என்று ஆத்திரத்தில் போலீஸ் ஸ்டேஷன் என்று புகார் கொடுத்திருக்கிறார்.

 போலீசார் சீரியல் நடிகை,  அவரின் ஆண் நண்பர்கள் அனைவரும் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர் .  இதை தெரிந்ததும் அனைவரும் தலைமறைவாகி இருக்கிறார்கள்.  அவர்களை பிடித்து விசாரணை நடத்த போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு இருக்கிறார்கள்.  சினிமாவில் வாய்ப்பு தருகிறேன் என்று சொல்லி ஆண் நண்பர்களுக்கு ஒரு இளம் பெண்ணை  விருந்தாக்கிய சீரியல் நடிகையின் செயல் கேரளாவில் பரபரப்பையும் அதிர்ச்சியினையும் ஏற்படுத்தி இருக்கிறது.