நண்பரின் கண் பார்வை இல்லாத 16 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வாலிபர்

 
si

கண் பார்வை இல்லாத மன வளர்ச்சி குன்றிய 16 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை வன்கொடுமை செய்யும் முயற்சித்தவர் போக்சோ சட்டத்தின் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மயிலாடுதுறை அருகே திருவிழந்தூர் களுக்கானி முட்டம் என்கிற கிராமத்தைச் சேர்ந்தவர் சேது .  இந்த வாலிபர் மயிலாடுதுறை அடுத்த தனது நண்பர் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.

su

 அந்த வீட்டில் யாரும் இல்லாத நிலையில் கண் பார்வை இல்லாத மனவளர்ச்சி குன்றிய 16 வயது சிறுமி இருந்திருக்கிறார்.  வீட்டில் யாரும் இல்லாததால் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்திருக்கிறார் .

அப்போது திரும்பி போட்ட கூச்சலில் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்திருக்கிறார்கள் அதற்குள் ரமேஷ் தப்பி ஓடி இருக்கிறார்.  இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார் . புகார் என்பதில் வழக்கு பதிவு செய்த மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அந்த வாலிபர் ரமேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.