மாடியில் விளையாண்ட சிறுமியை வன்கொடுமை செய்த பெரியப்பா!

 
rape

சென்னை கீழ்பாக்கத்தை சேர்ந்த 16 வயது சிறுமி, தற்போது 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். சமீபகாலமாக சிறுமி சற்று மன நிலை பாதிக்கப்பட்டு பயந்த நிலையில் இருந்து வந்தார். குறிப்பாக சிறுமி வீட்டில் தனியாக இருப்பதற்கும், பள்ளியை விட்டு தனியாக வருவதற்கும், ஆண்களை கண்டாலே உடல் நடுங்கி அச்சத்தில் இருந்து வந்தார். 

இதனையடுத்து சிறுமியிடம் பெற்றோர் ஏன் பயப்படுகிறாய்? ஆண்களை கண்டாலே ஏன் பயப்படுகிறாய்? என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய போது, மெல்ல தனக்கு நேர்ந்த கொடுமைகளை சிறுமி விவரித்துள்ளார். 5ஆம் வகுப்பு படிக்கும் போது மாடியில் விளையாடும் போது பெரியப்பா தன்னை பல முறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதன் பிறகு இது போன்ற நடுக்கம் வந்ததாகவும் தெரிவித்துள்ளார். 

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பெண் போலீசார் சிறுமிக்கு தைரியம் கொடுத்து கவுன்சிலிங் அளித்ததால் பெற்றோரிடம் கூற தவறிய அனைத்து விசயங்களையும் கொட்டி தீர்த்துள்ளார். பெரியப்பா வீட்டில் இருக்கக்கூடிய தனது சகோதரியுடன் மாடிக்கு சென்று விளையாடிய போது பல முறை தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பூப்பறிக்க மாடிக்கு சென்ற போதும் பாலியல் பலாத்காதம் செய்ததாகவும் சிறுமி தெரிவித்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து பெரியப்பா உறவுமுறை கொண்ட 59 வயது நபரை போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமி வன்கொடுமைக்குள்ளாக்கியது உறுதியானதால் பெரியப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர்.