விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம்

 
ch

விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டு இருக்கிறது .  கரூர் மகளிர் விரைவில் நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்திருக்கிறது.

 கரூர் மாவட்டத்தில் தாந்தோணி மலை அடுத்த முத்தழாடம்பட்டி காலனியைச் சேர்ந்தவர் தங்கவேல்.  58 வயதான அந்த நபர் கூலித் தொழிலாளி . இவர் கடந்த ஆண்டு மே மாதம் தன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த இரண்டாம் வகுப்பு படித்து வந்த ஏழு வயது சிறுமியை அவர்கள் வீட்டிற்கு வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றிருக்கிறார் . 

df

வீட்டுக்குள் வைத்து அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார் இதைப் பற்றி வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார் . அந்த சிறுமி வீட்டிற்கு வந்ததும் தனக்கு நடந்ததை தாயிடம் சொல்லி அழுதிருக்கிறார்.  இதைக் கேட்டு கடும் மாத்திரமடைந்த தாய்,  கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தங்கவேலு மீது புகார் அளித்துள்ளார்.

 போலீசார் தங்கவேலு மீது போக்சோ சட்டத்தின் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளார்கள்.  நீதிபதி உத்தரவை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் . இது குறித்த வழக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வந்த நிலையில் வழக்கு விசாரணைகள் முழுவதும் முடிந்து நீதிபதி நசிமா பானு நேற்று தீர்ப்பளித்து இருக்கிறார். 

அபோது, குற்றவாளி சிறுமியை கடத்திய குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும்,  போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.  கொலையும் மிரட்டல் விடுத்ததற்காக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டிருக்கிறது . இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.  பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு நான்கு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.