நள்ளிரவில் 6 வயது சிறுமி அலறல்! தப்பியோடிய இளைஞருக்கு தர்ம அடி

 
s

நள்ளிரவில் ஆறு வயது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு பதறி  அடித்துக் கொண்டு எழுந்து பார்த்த பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.  அந்த இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்ததும் சத்தம் போட அவர் தப்பி ஓடி இருக்கிறார் . அவரை விரட்டி பிடித்து  அடி கொடுத்து கஞ்சா போதையில் இருந்த அந்த இளைஞரை போலீசில் ஒப்படைத்துள்ளனர் .

சென்னையில் பட்டினப்பாக்கம் வசித்து வந்த அந்த தம்பதிக்கு 6 வயதில் பெண் குழந்தையும் 11 மாத ஆண் குழந்தையும் உள்ளது .  கோடை காலம் வெயில் தாக்கம் அதிகம் என்பதால் கதவைத் திறந்து வைத்து விட்டு தூங்கி இருக்கிறார்கள் .  நள்ளிரவில் திடீரென்று தங்களது ஆறு வயது மகளின் அழகை குரல் சத்தம் கேட்டிருக்கிறது. பதறி அடித்துக் கொண்டு எழுந்து பார்த்தபோது அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்கிற இளைஞர் தங்களின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டு இருக்கிறார்கள். 

s

 அதற்குள் அந்த இளைஞர் அணிகிறது தப்பி ஓடி இருக்கிறார்.  சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அந்த இளைஞரை பிடித்து விட அனைவரும் கட்டி வைத்து அடித்து உதைத்து இருக்கிறார்கள்.  பின்னர் பட்டினப்பாக்கம் போலீசாருக்கு தகவல் சொல்ல போலீசார் விரைந்து வந்து கஞ்சா போதையில் இருந்த அந்த இளைஞரை கைது செய்துள்ளனர்.

 அந்த இளைஞரிடம் நடத்திய விசாரணையில்,   பக்கத்தில் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பதும் இரவில் கஞ்சா அடித்து விட்டு வீடுகளில் திருடுவது வாடிக்கையாக வைத்திருந்ததும் தெரிய வந்திருக்கிறது . அப்படி திருடுவதற்காக சென்ற நேரத்தில் தான் வீடு திறந்து இருந்ததும்  சிறுமி கண்ணில் படவும் அச்சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார் என்பதும் தெரிய வந்திருக்கிறது . 

இதே இளைஞர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக 15 வயது சிறுவனுக்கு முட்டாய் வாங்கி கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.