இரண்டு கள்ளக்காதலிகள் - ஒருவர் மார்பில் குத்தி கிழித்து கொலை
ஒரு ஆணுக்கு இரண்டு கள்ளக்காதலிகள் அடித்துக்கொண்ட போட்டா போட்டியில் பெண் போலீசை காரில் கடத்தி கொடூரமாக குத்தி கொலை செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் துமகூரு மாவட்டத்தில் ஹிலியூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்தவர் சுதா(37). இவருக்கு திருமணம் ஆகி குழந்தை இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுதாவின் கணவர் இறந்துள்ளார். அதே காவல் நிலையத்தில் இன்னொரு ஏட்டாக பணிபுரிந்தவர் ராணி(30). இவருக்கும் திருமணமாகி குழந்தை இருக்கிறது.
இருவரும் பெங்களூரில் ஒரு காவல் நிலையத்தில் பணியாற்றும் ஏட்டுடன் கள்ள உறவில் இருந்து வந்துள்ளனர். இதனால் கள்ளக்காதலிக்குள் அடிக்கடி போட்டோ போட்டி ஏற்பட்டு வந்திருக்கிறது. இந்த போட்டோ போட்டி காவல் நிலையத்திலேயே நடந்திருக்கிறது. இதனால் சுதாவை தீர்த்துகட்ட ராணி முடிவு செய்து இருக்கிறார். சுதாவின் உறவினரான மஞ்சுநாத் என்பவரிடம் சுதாவை தீர்த்து கட்ட ராணி பேரம் பேசியிருக்கிறார். 5 லட்சம் ரூபாய் வரைக்கும் பேரம் பேசியிருக்கிறார்.
பேசி முடித்ததும் சுதாவை கொல்ல மஞ்சுநாத் நேரம் சரியான நேரம் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். பலமுறை கொலை செய்ய முயற்சித்தும் முடியவில்லை. இதனால் சுதாவை கொன்றே ஆக வேண்டும். இல்லை என்றால் நடப்பது வேறு என்று மஞ்சுநாத்தை மிரட்டி இருக்கிறார் ராணி. இந்த நெருக்கடியால் மஞ்சுநாத் தீவிரமாக களம் இறங்கி இருக்கிறார். தன் நண்பர் விஜய் அணையும் சேர்த்துக் கொண்டிருக்கிறார்.
கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி அன்று மாலையில் சுதா வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது பின்னால் காரில் சென்ற நிகில், வீட்டில் காரில் வீட்டில் கொண்டு போய் விடுவதாக சொல்லி சுதாவை காரில் ஏற்றி இருக்கிறார். வழியில் அந்த காரில் மஞ்சுநாத்தும் ஏறி இருக்கிறார். மஞ்சுநாத்தை பார்த்து சுதாவுக்கு சந்தேகம் வந்திருக்கிறது.
அவர் அசந்த நேரம் பார்த்து மஞ்சுநாத் தன் கையில் வைத்திருந்த பெப்பர் ஸ்பிரேவை சுதாவின் கண்களில் அடித்திருக்கிறார். இதில் சுதா நிலைகுலைந்து போய் இருந்திருக்கிறார். அந்த நேரத்தில் கத்தியால் சுதாவின் மார்பில் சரமாரியாக குத்தி கிழித்து இருக்கிறார் மஞ்சுநாத். இதில் சுதா துடி துடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்திருக்கிறார்.
இதை அடுத்து சுதாவின் உடலை புதருக்குள் வீசிவிட்டு எஸ்கேப் ஆகி இருக்கிறார்கள். சுதாவை கொலை செய்து விட்டதால் போலீஸ் தன்னை தேடும் கைது செய்து விடும் என்ற அச்சத்தில் மன உளைச்சலில் மஞ்சுநாத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். போலீஸ் விசாரணை நடத்தி சுதா கொலை வழக்கில் ராணி, நிகில் 2 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.