சிப்ஸ் வாங்கி கொடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மாமா
11 வயது சிறுமியை அச்சிறுமியின் மாமா சிப்ஸ் வாங்கி கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி இருக்கிறார்.
அசாம் மாநிலத்தில் துப்ரி என்கிற பகுதியில் வசித்து வந்த அந்த 11 வயது சிறுமியின் வீட்டிற்கு, சிறுமியின் தாயாரின் சகோதரர் முறையில் ஆன உறவினர் ஒருவர் வந்திருக்கிறார். 31 வயதான அந்த வாலிபர் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் செல்ல செல்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.
தாயும் சந்தோஷமாக, அழைத்துச் சென்று விட்டு கொண்டு வந்து விடுங்கள் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் மாமா முறையுள்ள அந்த வாலிபர் திட்டமிட்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்வதற்காக அழைத்துச் சென்றிருக்கிறார். போகும் வழியில் விளையாட்டு பொருட்கள், சாக்லேட், சிப்ஸ் வாங்கி கொடுத்திருக்கிறார்.
அதன் பின்னர் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றதும் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி விட்டு கையில் நூறு ரூபாய் பணத்தை கொடுத்து சிப்ஸ், பிஸ்கட் பாக்கெட் வாங்கி கொடுத்து அனுப்பி வைத்திருக்கிறார்.
வீட்டிற்கு வந்த சிறுமி வயிறு வலிக்கிறது என்று அழுது கொண்டே சொல்லி இருக்கிறார். சாதாரண வயிற்று வலியாக இருக்கும் என்று தாய் அலட்சியமாக இருந்திருக்கிறார். தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கவும் அதிர்ச்சி அடைந்த தாயார் என்ன நடந்தது என்று கேட்க, நடந்ததை சொல்லி அழுது இருக்கிறார் சிறுமி. இதைக் கேட்டு ஆத்திரம் வந்த தாயார், தனது உறவினர்களை அழைத்துக் கொண்டு சென்று அந்த வாலிபரின் வீட்டிற்கு சென்று தகராறு செய்திருக்கிறார்.
போலீசில் புகார் அளிக்க போவதாகவும் சொல்லி இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் போலீசில் புகார் அளித்தால் குடும்பத்துடன் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார்.
சிறுமியின் தாய், இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் குற்றம் உறுதியாகி இருக்கிறது. இதை அடுத்து அந்த வாலிபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.