ஆபாச பாடம் நடத்தல.. தேர்வு பேப்பரில் சினிமா பாடலை எழுதி வைத்த மாணவிகள்...

 
t

மாணவ மாணவிகளுக்கு ஆபாச பாடம் நடத்தியதாக அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.  ஆனால் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது.  தேர்வில் கேட்ட கேள்விகளுக்கு மாணவிகள் சிலர் சினிமா பாடலை எழுதி வைத்திருந்ததால் ஆசிரியர் கண்டித்து இருக்கிறார்.  அனைவரும் மத்தியிலும் அந்த தேர்வு பேப்பரை காட்டி இருக்கிறார்.  இதனால் ஆத்திரப்பட்ட மாணவிகள் அந்த ஆசிரியரை பழிவாங்குவதற்காக இப்படி செய்திருக்கிறார்கள் என்று சக ஆசிரியர்கள் திரண்டு சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

l

 கன்னியாகுமரி மாவட்டத்தில் இரணியல் பகுதியில் இயங்கி வரும்  அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரைக்கும் 1500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள்.     இந்த பள்ளியில் 11, 12 ஆம் வகுப்பிற்கு அக்கவுண்டன்சி பாடம் எடுத்து வந்த ஆசிரியர் கிறிஸ்துதாஸ்.   இவர் வகுப்பறையில் மாணவ, மாணவிகளுக்கு ஆபாச வகுப்பு நடத்தி வந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.   மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் இது குறித்து புகார் தெரிவிக்க சில மாணவிகள் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர்.  

,ett

 ஆனால் ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையிலும் நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்ததால்,   கடந்த ஆறாம் தேதி பள்ளிக்குச் சென்ற மாணவிகளின் பெற்றோர்களும் உறவினர்களும் பள்ளி தலைமை ஆசிரியரை முற்றுகையிட்டு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும்படி வாக்குவாதம் செய்தனர்.   இதை அடுத்து தக்கலை கல்வி மாவட்ட அதிகாரி பெருமாளிடம் புகார் ஒரு செல்ல,  அவர் நேரில் வந்து ஆசிரியர் கிறிஸ்துதாசிடம் விசாரணை நடத்தி இருக்கிறார். அப்படியும்  ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததால்,   மாணவர்களும் பெற்றோரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்று திரண்டு சென்று புகார் அளித்தனர்.   இதை அடுத்து ஆசிரியர் கிறிஸ்துதாஸ் மீது போக்சோ உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் ஆசிரியரை கைது செய்யப்பட்டார்.

s

இந்நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது.    ஆசிரியர் கிறிஸ்து தாஸுக்கு ஆதரவாக சக ஆசிரியர்கள் திரண்டு சென்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

 அந்த மனுவில்,    மாணவிகள் சிலர்  தேர்வில் கேட்ட கேள்விகளுக்கு சினிமா பாடல் எழுதி வைத்திருந்தனர்.   ஆசிரியர் கிறிஸ்துதாஸ் இதை  கண்டித்தார்.  அனைத்து மாணவ ,மாணவர்கள் மத்தியிலும் அந்த தேர்வு பேப்பரை காட்டினார்.   மேலும் தவறு செய்த மாணவிகளை வீட்டிலிருந்து பெற்றோரை அழைத்து வருமாறு சொன்னார். இதனால் ஆசிரியர் கிறிஸ்துதாஸ் மீது ஆத்திரத்தில் இருந்த மாணவிகள் தேவையில்லாமல் அவர் மீது பொய் புகார் அளித்துள்ளனர் என்று அந்த மனுவில் கூறி இருக்கிறார்கள்.

es

  ஆசிரியர் மீது போடப்பட்டிருக்கும் வழக்கை கைது நீக்கி அவரை விடுதலை செய்ய வேண்டும்.  இல்லை என்றால் மாவட்ட அளவில் போராட்டம் வெடிக்கும் என்றும் எச்சரித்து இருக்கிறார்கள்.