நீச்சலடித்து கரையேற முயற்சித்த கணவர் - தலையில் கல்லைத் தூக்கிப்போட்ட மனைவி

 
x

நண்பரின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்த போது அவரின் மனைவியுடன் கள்ள உறவு ஏற்பட்டு இருக்கிறது.   இதற்கு நண்பர் இடையூறாக இருந்த தால் அவரை கல்குவாரி குட்டையில் தள்ளியுள்ளனர்.   நீச்சல் அடித்து உயிர் தப்பித்து அவர் கரையறிய போது அவரின் தலையில் பெரிய கல்லை தூக்கி போட்டுக் கொன்றிருக்கிறார் மனைவி .   ஆந்திர மாநிலத்தில்  நகரி ராமாபுரத்தில் நடந்துள்ளது இந்த சம்பவம்.

 நகரி ராமாபுரத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார்(37).  இவரது மனைவி வனிதா(30).  கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.   இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.   

g

 நகரியில் செல்போன்  கடை நடத்தி குடும்பத்தை நடத்தி வந்துள்ளார் விஜயகுமார்.   அவரின் கடைக்கு தமிழரசு என்ற 20 வயது இளைஞர் அடிக்கடி வந்து சென்றிருக்கிறார்.  இந்த பழக்கத்தில் தமிழரசுவை தனது வீட்டிற்கு அடிக்கடி அழைத்து சென்று இருக்கிறார் விஜயகுமார்.  அப்போது வனிதாவுக்கும் தமிழரசுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது.  இது கள்ள உறவாக மாறி இருக்கிறது .

விஜயகுமார் கடைக்கு சென்ற நேரத்தில் எல்லாம் வனிதாவுடன் உல்லாசமாக இருந்துள்ளார் தமிழரசு.  இந்த விவகாரம் விஜயகுமாருக்கு தெரிய வந்ததும்  ஆத்திரப்பட்ட அவர் மனைவி வனிதாவை கண்டித்து இருக்கிறார்.  தங்கள் கள்ள உறவுக்கு இடையூறு ஏற்பட்டுவிட்டது என்பதை எண்ணி கணவர் விஜயகுமாரை தீர்த்து கட்டி விட வேண்டியது தான் என்று தமிழரசுவிடம் சொல்லி இருக்கிறார் வனிதா.

 அதன்படி நேற்று முன் தினம் இரவில் ராமாபுரம் அருகே இருக்கும்  கல்குவாரிக்கு கணவரை  அழைத்துச் சென்றிருக்கிறார் வனிதா.  அங்கு முன்னதாகவே திட்டமிட்டு தமிழரசவுடன் அவரது நண்பர்கள் நாகராஜ், சந்தோஷ்குமார் மூன்று பேரும் காத்திருந்துள்ளார்கள்.

gg

 கல்குவாரிக்கு அருகே சென்றதும் நான்கு பேரும் சேர்ந்து விஜயகுமாரை கல்குவாரி குட்டைக்குள் தள்ளிவிட்டு இருக்கிறார்கள்.  அவர் இறந்துவிட்டார் என்று நினைத்து மேலே நின்று இருக்கிறார்கள்.  ஆனால் விஜயகுமார் நீச்சல் அடித்துக் கொண்டு கரைக்கு தப்பித்து வர முயற்சித்து இருக்கிறார்.   இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மனைவி வனிதா, பெரிய கல்லை எடுத்து தூக்கி கணவரின் தலையில் போட்டு இருக்கிறார்.  இதில் விஜயகுமார் உயிரிழந்து விட்டார். 

 பின்னர் தனது கணவரை காணவில்லை என்று நகரி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார் வனிதா.  போலீசார்  நடத்திய விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் அவரிடம்  போட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில் உண்மையை ஒப்பு கொண்டிருக்கிறார்.   இதன் பின்னர் வனிதாவும் அவரது கள்ளக்காதலன் தமிழரசு,  நண்பர்கள் நாகராஜ், சந்தோஷ் குமார் ஆகியோரே கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.