கெடுத்துட்டானுங்க என்று போலீசுக்கு போன சிறுமியை போலீசும்...
கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி அது குறித்து போலீசில் புகார் அளிக்க சென்றபோது அங்கு போலீசும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் நிகழ்ந்திருக்கிறது.
உத்தரபிரதேச மாநிலத்தில் லலித்பூர் மாவட்டம் பாலி பகுதியில் வசிக்கும் 4 சிறுவர்கள் 13 வயது சிறுமியை கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி அன்று போபாலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்ற அந்த 4 சிறுவர்களும் மூன்று நாட்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்கள். அதன் பின்னர் நான்கு சிறுவர்களும் சிறுமியை பாலிக்கு அழைத்துவந்து , பாலிகாவல் நிலைய பொறுப்பதிகாரி திலக்தாரி சரோஜிடம் ஒப்படைத்துவிட்டு தப்பிச் சென்று இருக்கிறார்கள்.
காவல் நிலையப் பொறுப்பாளர் சிறுமியை அவரது அத்தையுடன் குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார். இரண்டு நாட்களுக்குப் பின்னர் காவல் நிலையப் பொறுப்பாளர் சம்பவம் குறித்து வாக்குமூலம் பெறுவதற்காக சிறுமியை காவல் நிலையத்திற்கு வரவழைத்து இருக்கிறார்.
அப்போது அவர் சிறுமியை ஒரு அறைக்கு அழைத்துச் சென்று கதவுகளை மூடிவிட்டு பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார். பின்னர் மீண்டும் சிறுமியை குழந்தைகள் நலன் காப்பகத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
காப்பகத்தில் நடந்த ஒரு ஆலோசனைக் கூட்டத்தின் போது, சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி சொல்லியிருக்கிறார். இதன் பின்னர் குழந்தைகள் நல காப்பகத்தினர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருக்கிறார்கள். அதன்படி காவல் நிலையப் பொறுப்பாளர், சிறுமியின் அத்தை உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய காவல் நிலைய கண்காணிப்பாளர் உத்தரவிட்டிருக்கிறார்.
காவல் நிலையப் பொறுப்பாளர் பணியிடை நீக்கம் செய்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
இந்த வழக்கு தொடர்பாக 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு இருக்கிறது. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார் டிஐஜி