வீடு புகுந்து சிறுமி பாலியல் பலாத்காரம்! ஓடும் ரயிலில் இருந்து குதித்து ஓடிய இளைஞர்

 
g

வீடு புகுந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு ரயிலில் ஏறி தப்ப முயன்ற வாலிபரை விரட்டி பிடித்து போலீசார் கைது செய்துள்ளனர்.  மகாராஷ்டிரா மாநிலத்தில் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தமிழ்நாட்டுக்கு தப்ப முயன்ற அந்த வாலிபர் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் பிடிபட்டுள்ளார்.

 மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் ரியே சாலையில் பெற்றோருடன் வசித்து வருகிறார் அந்த 14 வயது சிறுமி.   நேற்று முன்தினம் மாலையில் திடீரென்று அச்சிறுமியின் வீட்டுக்குள் 25 வயது இளைஞர் ஒருவர் அத்துமீறி நுழைந்திருக்கிறார்.   வீட்டில் சிறுமி தனியாக இருப்பதை புரிந்து கொண்ட அந்த இளைஞர் சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்டு இருக்கிறார்.   சிறுமியின் ஆடைகளை கிழித்து இருக்கிறார் .   

சிறுமியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.   ஆனால் அந்த சிறுமியை அடித்து பாலியல் துன்புறுத்தல் செய்து இருக்கிறார் .  பாலியல் பலாத்காமும் செய்திருக்கிறார் அந்த இளைஞர்.   பின்னர் அந்த சிறுமியை மிரட்டி விட்டு தப்பி இருக்கிறார்.  

j

 அன்று இரவு தனக்கு நடந்த கொடுமையை சிறுமி தன் தாயாரிடம் சொல்ல ,  தாயார் உடனே அதிர்ச்சி அடைந்து,   சீவரி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்திருக்கிறார் .   உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்ததில்,  அந்த இளைஞர் மகாராஷ்டிரா மும்பையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தப்ப முயற்சிப்பது தெரிய வந்திருக்கிறது.

 இதை அடுத்து நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்த விவரங்கள் சிசிடிவி காட்சிகள்  போலீசாருக்கு தெரிய வந்திருக்கிறது.  இதை அறிந்து கொண்ட போலீசார் மும்பையில் இருந்து ரயில் எப்போது புறப்படும் என்று நேர அட்டவணையை பார்த்திருக்கிறார்கள்.   அதன் பின்னர் தாதர் ரயில் நிலையத்தில் சிறை பிடித்து அதில் ஏறி இருக்கிறார்கள். ஒவ்வொரு பெட்டியாக வாலிபரை தேடி இளைஞரை தேடிச் சென்று இருக்கிறார்கள்.

 அந்த இளைஞரின் போட்டோ இருந்ததால் அதை வைத்து அடையாளம் பார்த்துக் கொண்டே சென்றிருக்கிறார்கள்.   ஏழாம் எண் கொண்ட படுக்கை வசதிகளை பெட்டியில் இளைஞரை போன்று ஒருவர் இருப்பதை பார்த்து போலீசார் உற்றுப் பார்க்க அந்த இளைஞர் அங்கிருந்து ஓடி இருக்கிறார் .   அவர் அந்த இளைஞர் தான் என்பதை போலீசார் உறுதிப்படுத்திக் கொண்டதால் துரத்தியிருக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் ரயில் முழுண்டு மற்றும் தானே ரயில் நிலையத்திற்கு இடையே சென்று கொண்டிருந்தபோது திடீரென்று கீழே குதித்து தண்டவாளத்தில் ஓடி இருக்கிற போலீசாரும் விடாமல் கீழே குதித்து தண்டவாளத்தில் விரட்டிச் சென்று அந்த இளைஞரை குறித்து சிறு வரி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்ட மூன்று மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது .
குற்றவாளிகளை நேற்று நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி உள்ளனர். குற்றவாளியை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை எடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.