அடிக்கடி ஆபாச வீடியோ காட்டி சிறுவனை மடக்கிய இளம்பெண் -பரிதவித்து நின்ற நான்கு குழந்தைகள்

நான்கு குழந்தைகளுக்கு தாயான அந்த இளம் பெண் எதிர்வீட்டு பதினைந்து வயது சிறுவனுக்கு அடிக்கடி ஆபாச வீடியோ காட்டி மயக்கி சிறுவனுடன் பாலியல் உறவு வைத்திருந்ததோடு மட்டுமல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி தனியாக வாழலாம் என்று அழைத்துச் சென்றிருக்கிறார். ஆனால் போலீஸ் செல்போன் சிக்னலை வைத்து பின் தொடர்ந்து சென்று பிடித்துவிட்டார்கள்.
ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணா மாவட்டத்தில் குடிவாடா குட்மெண்ட் பேட்டை. இப்பகுதியைச் சேர்ந்தவர் ஸ்வப்னா. திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளன ர். கணவருக்கு உடல்நிலை சரியில்லாததால் நான்கு குழந்தைகளுடன் ஸ்வப்னா தனியாக வாழ்ந்து வந்திருக்கிறார். இந்த நிலையில் எதிர் வீட்டில் இருந்த எட்டாம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுவன் அடிக்கடி ஸ்வப்னா வீட்டுக்கு டிவி பார்க்க வந்திருக்கிறான்.
அப்போது அந்த சிறுவன் மேல் ஆசை கொண்ட ஸ்வப்னா தனது ஆசைக்கு இணங்குமாறு அந்த சிறுவனை வற்புறுத்து செல்போனில் அடிக்கடி ஆபாச படத்தை காட்டி வந்திருக்கிறார். இதில் மயங்கிய சிறுவனிடம் பாலியல் உறவு கொண்டிருக்கிறார். தொடர்ந்து இப்படி சிறுவனுடன் பாலியல் உறவு கொண்டிருந்த ஸ்வப்னா, என் கணவனையும் நான்கு பிள்ளைகளையும் விட்டுவிட்டு வந்து விடுகிறேன். எங்காவது சென்று தனியாக வாழலாம் என்று சொல்லி கடந்த 19ஆம் தேதி அன்று சிறுவனை ஹைதராபாத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
அங்கே ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருக்கிறார்கள். இதற்கிடையில் சிறுவனை காணவில்லை என்று ஜூலை 25ஆம் தேதி அன்று சிறுவனின் தந்தை போலீசில் புகார் கொடுக்க எதிர் வீட்டு பெண்ணும் காணாமல் போய் இருப்பது தெரிய வந்திருக்கிறது. இதை அடுத்து ஸ்வப்னாவின் செல்போனை ஆய்வு செய்தபோது, செல்போனை வைத்து பார்த்த போது ஹைதராபாத்தில் உள்ள பாலா நகரில் உள்ள லாட்ஜ் ஒன்றில் சிக்னல் காட்டி இருக்கிறது. போலீசார் அங்கு விரைந்து சென்று இருவரையும் மீட்டு வந்துள்ளனர் . சிறுவனுக்கு கவுன்சிலிங் கொடுத்து பெற்றோரிடம் அனுப்பிவிட்டு ஸ்வப்னா மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.