சென்னையில் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகி வெட்டிக்கொலை

 
Murder

சென்னை அடுத்த பெரம்பூரில் தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட இளைஞரணி செயலாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Police

சென்னை வியாசர்பாடி சர்மா நகர் 7வது தெரு  தெருவை சேர்ந்தவர் கார்த்திக்(30). இவர் தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட இளைஞரணி செயலாளர். இவர் பர்மா பஜாரில் செல்போன் கடை வைத்துள்ளார். இன்று மதியம் மணியளவில் பெரம்பூர் மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான மயானத்தில் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது நண்பர்களுடன் ஏற்பட்ட பிரச்சனையில் கார்த்திக் உடன் மது குடித்துக் கொண்டிருந்த  ஐந்து பேர் கார்த்திக்கை சரமாரியாக வெட்டினர். இதில் முகம் சிதைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த செம்பியம் போலீசார், கார்த்திக்கின் உடலை கைப்பற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில்  இரண்டு மாதத்திற்கு முன்பு பிரபல ரவுடியான காட்டான் மோகன் என்பவருடன் சேர்ந்து கார்த்திக் மது அருந்தியதாகவும் அப்போது கார்த்திக் காட்டான் மோகனை அடித்ததாகவும் அந்த முன் விரோதத்தில்  காட்டான் மோகனின் மகன் மாதவன் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து இந்த கொலையை அரங்கேற்றியதாகவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து மாதவன் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.